தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரதமர் பதவி ஏற்கத் தயாராகிறார் பிட்டா

2 mins read
568cd019-c47e-44af-af6a-9e567d689e26
-

முற்­போக்­கு­டைய கொள்­கைத் திட்­டங்­களை முதன்­மைப்­ப­டுத்­தும் 'மூவ் ஃபார்வர்டு' கட்சி (எம்­எ­ஃப்பி) தாய்­லாந்­தில் நேற்று முன்­தி­னம் நடந்து முடிந்த பொதுத் தேர்­த­லில் வெற்­றி­பெற்­றுள்­ளது.

தாய்­லாந்து தேர்­தல் ஆணை­யம் 99% வாக்கு எண்­ணிக்­கையை முடித்த நிலை­யில், கட்­சித் தலை­வர் 42 வயது பிட்டா லிம்­ஜா­ரோன்­ராட், "அர­சாங்­கம் அமைக்­கும் நிலையை அடைந்­து­விட்­டோம் என உறு­தி­யாக நம்­ப­லாம்," என்­றார்.

தேர்­த­லுக்­காக தீவிர பிர­சாரத்­தில் ஈடு­பட்ட திரு­வாட்டி பேடோங்­டர்ன் ஷின­வத்­ரா­வுக்கு வாழ்த்­துக் கூறிய திரு பிட்டா, அர­சாங்­கம் அமைப்­ப­தற்­காக அவ­ரது பியூ தாய் கட்­சி­யு­டன் மேலும் நான்கு கட்­சி­க­ளு­டன் இணைந்து கூட்­ட­ணிக் கட்சி அமைக்க அழைப்­பும் விடுத்­தி­ருந்­தார்.

அதை­ய­டுத்து 309 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அடங்­கும் இந்­தக் கூட்­டணி அர­சாங்­கத்­தில் இணை­வ­தற்கு பியூ தாய் கட்சி அதன் சம்­மதத்தை நேற்று தெரி­வித்­தது. அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்­துச் செல்­லும் உரி­மையை திரு பிட்டா உழைத்­துப் பெற்­றுள்­ள­தா­க­வும் பியூ தாய் கட்சி குறிப்­பிட்­டது.

"பொரு­ளி­யல், அர­சி­யல் ரீதி­யாக ஏற்­ப­டக்­கூ­டிய அபா­யத்­தைக் குறைத்­துக்­கொள்ள முடிந்த அள­வுக்­குத் துரி­த­மாக அர­சாங்­கத்தை அமைக்க முயல்­வோம்," என்­றார் திரு பிட்டா.

தேர்­த­லின் 500 இடங்­களில் ஆக அதி­க­மாக 151 இருக்­கை­களை எம்­எ­ஃப்பி வென்­றது. கட்­சிக்கு ஆத­ர­வா­கக் கிட்­டத்­தட்ட 14 மில்­லி­யன் வாக்­கு­கள் பதி­வா­ன­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அதை­ய­டுத்து, நேற்று அதி­காலை வாக்­கில் தாய்­லாந்­துப் பிர­த­ம­ருக்­காக எம்­எ­ஃப்பி நிறுத்­திய திரு பிட்டா, தாம் நாட்­டின் 30வது பிர­த­மர் ஆவ­தற்­குத் தயா­ராக உள்­ள­தாக அறி­வித்­தி­ருந்­தார்.

"நமக்கு ஒரே மாதி­ரி­யான கன­வு­கள், ஆசை­கள். அத்­து­டன் நாம் நேசிக்­கும் தாய்­லாந்து இன்­னும் மேம்­ப­ட­லாம் என்­ப­தில் நம்­பிக்கை கொண்­டுள்­ளோம். நீங்­கள் எனக்கு வாக்­க­ளித்­தி­ருந்­தாலும் இல்­லா­விட்­டா­லும் நான் உங்­க­ளுக்கு சேவை­யாற்­று­வேன்," என்­றார் திரு பிட்டா.

தாய்­லாந்­தில் வாக்­க­ளிக்­கத் தகு­தி­பெற்ற 52 மில்­லி­யன் பேரில் முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வுக்கு இத்­தேர்­த­லில் 75.22 விழுக்­காட்­டி­னர் வாக்­க­ளித்­தி­ருந்­த­னர்.

முன்­னாள் பிர­த­மர் தக்­சின் ஷின­வத்­ரா­வுக்­குத் தொடர்­பு­டைய பியூ தாய் கட்சி இரண்­டா­வது நிலை­யில் 141 இடங்­க­ளைக் கைப்­பற்­றி­யி­ருந்­த­தாக ஆணை­யம் தெரி­வித்­தது.

இக்­கட்சி 2001ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்­வொரு தேர்­தலி­லும் ஆக அதி­க­மான இருக்­கை­க­ளைக் கைப்­பற்றி வந்­தாலும் அது விரும்­பிய சாதனை­ய­ளவு வெற்றி இம்­முறை கிட்­ட­வில்லை.

இந்­நி­லை­யில் எதிர்­கா­லக் கூட்­ட­ணியை உறு­திப்­ப­டுத்­து­வதற்கு திரு பிட்­டா­வும் அவ­ரது நிர்­வா­கக் குழு­வி­ன­ரும் நேற்று சந்­திப்பு நடத்­தி­னர்.

இருப்­பி­னும், தேர்­தல் ஆணை­யம் தேர்­தல் முடி­வு­களை அங்­கீ­க­ரிக்க இன்­னும் 60 நாள்­கள் உள்­ளன.

வெளி­நாட்­டில் உள்­ளோர் அளித்த வாக்­கு­கள் செல்­லு­படி­யா­காது என்­பது போன்ற குற்­றச்­சாட்­டு­களும் எழுந்­துள்­ளன.

ஐந்து கட்­சி­க­ளு­டன் எம்­எ­ஃப்பி கூட்­டணி அர­சாங்­கம் அமைத்­தா­லும் பிர­த­ம­ராக அக்­கட்சி நிய­மித்­துள்­ள­வ­ரைத் தேர்ந்­தெ­டுப்­ப­தற்கு அமைச்­சரவை­யில் கூடு­தல் ஆத­ரவு தேவைப்­படும்.

மேலும், முடக்­கப்­பட்ட ஊடக நிறு­வ­னம் ஒன்­றில் பங்­கு­கள் வைத்­தி­ருப்­பது தொடர்­பில் திரு பிட்டா மீது தொடங்­கப்­பட்ட விசா­ரணை நடந்­து­வரு­வ­தால் தேர்­த­லில் போட்­டி­யி­டும் தகு­தியை அவர் இழக்­கக்­கூ­டும்.