மியன்மாரைச் சிதைத்த மோக்கா சூறாவளி: குறைந்தது மூவர் உயிரிழப்பு, பலர் காயம்

மியன்மாரைச் சிதைத்த மோக்கா சூறாவளி: குறைந்தது மூவர் உயிரிழப்பு, பலர் காயம்

1 mins read
929c040c-0338-49b8-a1e9-4c913d1521fc
-

மேற்கு மியன்­மாரை 'மோக்கா' சூறா­வளி தாக்­கி­ய­தில் குறைந்­தது மூவர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தா­க­வும் 13 பேருக்­குக் காயம் என்­றும் அந்­நாட்டு ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன. 1,000க்கும் மேற்­பட்ட கட்­ட­டங்­கள் சேத­ம­டைந்­துள்­ளன.

சூறா­வ­ளி­யில் பெருத்த சேதத்­துக்­குள்­ளா­னது கல­வ­ரத்­தில் சிக்கி­யுள்ள ரக்­கைன் மாநி­லம் என்று அறி­யப்­ப­டு­கிறது.

வீட்டுக் கூரை­க­ளைச் சூறை­யாடும் அள­வுக்கு மணிக்கு 210 கிலோ­மீட்­டர் வேகத்­தில் சூறா­வளிக் காற்று பதி­வா­ன­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், 850க்கும் மேற்­பட்ட வீடு­களும் 64 பள்­ளி­களும் 14 மருத்­து­வக் கட்­ட­டங்­களும் ஏழு தொலைத்­தொ­டர்பு கட்­ட­டங்­களும் சூறா­வ­ளி­யால் சேத­ம­டைந்­தும் அழிந்­தும் போன­தாக அந்­நாட்டு தொலைக்­காட்சி செய்தி தெரி­வித்­தது.

இதற்­கு­முன் நர்­கிஸ் சூறா­வளி­யால் தென்­மி­யன்­மா­ரில் ஏறத்­தாழ 140,000 பேர் உயி­ரி­ழந்­த­னர்.