தென்னாப்பிரிக்காவுடன் இரண்டு உடன்பாடு

2 mins read
46d4c747-702c-48c6-ad80-c6f6cec751e8
-

தக­வல் தொடர்­புத் தொழில்­நுட்­பத்­தி­லும் மனி­த­வள மேம்­பாட்­டி­லும் அணுக்­க­மாக ஒத்­து­ழைக்க சிங்­கப்­பூ­ரும் தென்­னாப்­பி­ரிக்­கா­வும் இணக்­கம் தெரி­வித்­துள்­ளன.

இதன் தொடர்­பில் பிர­த­மர் லீ சியன் லூங், தென்­னாப்­பி­ரிக்க அதி­பர் சிரில் ராம­போசா முன்­னி­லை­யில் கேப்­ட­வு­னில் நேற்று இரண்டு புரிந்­து­ணர்­வுக் குறிப்பு­கள் கையெ­ழுத்­தா­யின.

பிர­த­மர் லீ தென்­னாப்­பி­ரிக்­கா­விற்­கும் கென்­யா­விற்­கும் ஆறு­நாள் அதி­கா­ர­பூர்­வப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார்.

தென்­னாப்­பி­ரிக்­கத் தலை­நகர் கேப்­ட­வு­னில் உள்ள அதி­பர் அலு­வ­ல­கத்­தில் நேற்று பிர­த­மர் லீக்கு 19 குண்­டு­கள் முழங்க மரி­யாதை அணி­வ­குப்­பு­டன் வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.

புரிந்­து­ணர்­வுக் குறிப்புகள் கையெ­ழுத்­தானபின் இரு தலை­வர்­களும் கூட்­டா­கச் செய்­தி­யாளர்­க­ளைச் சந்­தித்­த­னர்.

சிங்­கப்­பூ­ரும் தென்­னாப்­பி­ரிக்­கா­வும் ஏற்­கெ­னவே வலு­வான ஒத்­து­ழைப்­பைக் கொண்­டுள்ள நிலை­யில், இவ்­விரு உடன்­பாடு­களும் புதிய, முன்­னோக்­கிய துறை­களில் ஒத்­து­ழைப்பை விரி­வு­ப­டுத்­தும் என்று பிர­த­மர் லீ குறிப்­பிட்­டார்.

வேளாண்­வ­ணி­கம், நகர்ப்­புறத் தீர்­வு­கள், விருந்­தோம்­பல், தயா­ரிப்பு, துறை­மு­கங்­கள், தள­வா­டங்­கள், புத்­தாக்­கம், தொழில்­நுட்­பம் எனப் பல துறை­களில் சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் தென்­ ஆப்­பி­ரிக்­கா­வில் செயல்­பட்டு வரு­வதை அவர் குறிப்­பிட்­டார்.

நீர் மேலாண்மை, மின்­னி­லக்­க­ம­யம், துப்­பு­ரவு உள்­ளிட்ட துறை­களில் இரு­நா­டு­களும் ஆக்கபூர்வமான பேச்­சு­வார்த்­தையை நடத்­தி­ய­தாக திரு ராம­போசா தெரி­வித்­தார்.

தென்­னாப்­பி­ரிக்­கா­வில் தொழில் வாய்ப்­பு­களை அறி­ய­வும் அந்­நாட்டு நிறு­வ­னங்­களுடன் நீண்­ட­கா­லப் பங்­கா­ளித்­து­வம் செய்­து­கொள்­ள­வும் ஏது­வாக, பிர­த­மர் லீயின் இந்­தப் பய­ணத்­தில் 17 சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­களின் பேரா­ளர்­களும் இடம்­பெற்­றுள்­ளனர்.

சிங்­கப்­பூர், ஜோகனஸ்­பர்க், கேப்­ட­வுன் நக­ரங்­க­ளுக்கு இடையே சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நாள்­தோ­றும் விமா­னங்­களை இயக்கி வரு­கிறது.

இந்­நி­லை­யில், விமா­னத் தொடர்­பு­கள், முத­லீ­டு­கள், மின்­னி­லக்­கத் தொடர்­பு­கள் என மேலும் பல வழி­க­ளி­லும் இரு­நா­டு­களும் உறவை இன்­னும் அணுக்­க­மாக்க முடி­யும் என்று பிர­த­மர் லீ தெரி­வித்­தார்.

"தென்­னாப்­பி­ரிக்­கா­வு­ட­னான பங்­கா­ளித்­து­வத்தை மேலும் மேம்­ப­டுத்த சிங்­கப்­பூர் கடப்­பாடு கொண்­டுள்­ளது," என்று அவர் சொன்­னார்.

இது­வரை ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட தென்­னாப்­பி­ரிக்க அதி­கா­ரி­கள் சிங்­கப்­பூர் ஒத்­துழைப்­புத் திட்­டத்­தின்­கீழ் இடம்­பெற்­றுள்ள பயிற்சி வகுப்­பு­களில் பங்­கேற்­றுள்­ள­தாகவும் திரு லீ குறிப்­பிட்­டார்.

கடந்த 2018ஆம் ஆண்­டில் இருந்து இருநாடு­க­ளுக்கு இடை­யி­லான வணி­கம் 60 விழுக்­காட்­டிற்­கு­மேல் கூடி­யுள்­ளது. சென்ற ஆண்­டில் அதன் மதிப்பு $2.7 பில்­லி­ய­னுக்­கும் அதி­க­மாக இருந்­தது.

இரு­நா­டு­களும் இவ்­வாண்­டில் தங்­க­ளுக்கு இடை­யி­லான அர­ச­தந்­திர உற­வு­க­ளின் 30ஆம் ஆண்டைக் கொண்­டா­டு­கின்­றன.