சர்க்கரை விலை மேலும் உயரலாம்

சர்க்கரை விலை மேலும் உயரலாம்

2 mins read

உற்பத்தி குறைந்ததால் ஏற்றுமதிக்கு இந்தியா கட்டுப்பாடு விதிப்பு

இந்­தி­யா­வில் சர்க்­கரை உற்­பத்தி குறைந்­துள்­ள­தா­லும் அங்கு ஏற்று­ம­திக்­குக் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­லும் உலக நாடு­களில் சர்க்­கரை விலை மேலும் உய­ரக்­கூ­டும்.

கடந்த பத்­தாண்­டு­களில் இல்­லாத அள­விற்­குச் சர்க்­கரை விலை உயர்ந்­துள்­ளது. கடந்த 2013 மே மாதத்தை ஒப்­பு­நோக்க, பத­னி­டப்­ப­டாத சர்க்­க­ரை­யின் விலை இப்­போது 65 விழுக்­காடு அதி­க­மாக உள்­ளது.

இப்­போ­தைக்கு, அக்­டோ­பர் முதல் செப்­டம்­பர் வரை­யி­லான ஓராண்டு காலத்­திற்கு 6.1 மில்­லி­யன் டன் சர்க்­க­ரையை மட்­டும் ஏற்­று­மதி செய்ய இந்­திய அரசு அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், ஏற்­கெ­னவே 5.7 மில்­லி­யன் டன் சர்க்­கரை ஏற்­று­மதி செய்­யப்­பட்­டு­விட்­ட­து என்று அனைத்­திந்­திய சர்க்­கரை வணி­கச் சங்­கம் தெரி­வித்­துள்­ளது.

எஞ்­சி­யுள்ள 0.4 மில்­லி­யன் டன்­னும் இம்­மா­தம் 25ஆம் தேதிக்­குள் ஏற்­று­மதி செய்­யப்­பட்­டு­விடும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அதன்­பின் இந்­தி­யா­வி­லி­ருந்து அடுத்த ஆண்­டு­தான் சர்க்­கரை ஏற்­று­மதி தொடங்­கும் என்­றும் சொல்­லப்­ப­டு­கிறது.

கடந்த 2021-22 பரு­வத்­தில் சாதனை அள­வாக 11.2 மில்­லி­யன் டன் சர்க்­க­ரையை ஏற்­று­மதி செய்­தி­ருந்­தது.

சென்ற 2022-23ஆம் ஆண்­டில் அந்­நாடு 38.5 மில்­லி­யன் டன் சர்க்­க­ரையை உற்­பத்தி செய்­யும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், அது 36.8 மில்­லி­யன் டன் என்ற அள­விற்கே இருந்­தது என்று இந்­தி­யச் சர்க்­கரை ஆலை­கள் சங்­கம் (இஸ்மா) கடந்த மாதம் 26ஆம் தேதி தெரி­வித்­தது.

இந்­தி­யா­வின் உள்­நாட்­டுப் பயன்­பாட்­டிற்கே கிட்­டத்­தட்ட 27.5 மில்­லி­யன் டன் சர்க்­கரை தேவைப்­ப­டு­கிறது. அங்கு எத்­த­னால் தயா­ரிப்­பிற்­கும் சர்க்­கரை பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

கரும்பு விளைச்­சல் அதி­க­மாக உள்ள மாநி­லங்­களில் ஒன்­றான மகா­ராஷ்­டி­ரா­வில் கால­நிலை சார்ந்த இடை­யூ­று­க­ளால் இம்­முறை விளைச்­சல் கிட்­டத்­தட்ட 15 விழுக்காடு குறைந்­து­விட்­ட­தாக இஸ்மா தலை­வர் ஆதித்ய ஜுஞ்­சுன்­வாலா கூறி­னார்.

"மழைப்­பொ­ழிவு நன்­றாக இருந்­தா­லும் அது பர­வ­லாக இல்லை," என்­றார் அவர்.

இந்­தப் பரு­வத்­தில் இந்­தி­யா­வில் சர்க்­கரை உற்­பத்தி 31.1 மில்­லி­யன் டன்­னாக உள்­ளது என்­றும் இது ஆண்டு அடிப்­ப­டை­யில் ஒப்புநோக்க 5.4 விழுக்காடு குறைவு என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

கரும்பு கிடைக்­கா­த­தால் பல சர்க்­கரை ஆலை­கள் முன்­ன­தா­கவே உற்­பத்­தியை நிறுத்­திக்­கொண்­டன.

கோடைக்­கா­லத்­தில் குளிர்­பா­னங்­கள், பனிக்­கூழ் நுகர்வு அதி­க­மாக இருக்­கும் என்­ப­தால் சர்க்­க­ரை­யும் அதி­கம் தேவைப்­படும்.

இத­னி­டையே, சர்க்­கரை ஏற்று­மதி 6.1 மில்­லி­யன் டன் என்ற அள­வி­லி­ருந்து மேலும் குறைக்­கப்­ப­ட­லாம் என்று பேச்சு அடி­படு­கிறது. அந்த அளவை மேலும் 85,000 டன் குறைக்க இந்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது என்று கடந்த வாரம் `தி மின்ட்' நாளி­தழ் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.

உல­கி­லேயே ஆக அதி­க­மா­கச் சர்க்­கரை உற்­பத்தி செய்­யும் நாடு இந்­தி­யா­தான்.

சீனா, தாய்­லாந்து போன்ற நாடு­க­ளி­லும் சர்க்­கரை உற்­பத்தி குறைந்­துள்ள நிலை­யில், இந்­தி­யா­வும் சர்க்­கரை ஏற்­று­ம­திக்­குக் கட்­டுப்­பாடு விதித்­தி­ருப்­ப­தால் உல­க­ள­வில் அதன் விலை மேலும் உயர்­வ­தைத் தவிர்க்க முடி­யாது என்று பகுப்­பாய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.