கர்நாடகாவில் விரைவில் புதிய அமைச்சரவை பதவியேற்கும்: காங்கிரஸ்

2 mins read
421b9c5e-194c-4863-bbd1-813b237487ff
-

இந்­தி­யா­வின் கர்­நா­டக மாநி­லத்­தில் 48 முதல் 72 மணி நேரத்­திற்­குள் புதிய அமைச்­ச­ரவை பத­வி­யேற்­கும் என காங்­கி­ரஸ் கட்சி நேற்று தெரி­வித்­தது.

கர்­நா­ட­கா­வில் நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில், ஆட்­சி­யில் இருந்த பாஜ­கவை வீழ்த்தி காங்­கி­ரஸ் கட்சி தனிப்­பெ­ரும்­பான்­மை­யு­டன் ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­யது.

இந்­நி­லை­யில், கர்­நா­டக முதல்­வர் யார் என்­பதை அறி­விப்­ப­தில் இழு­பறி நீடித்து வரு­கிறது. முன்­னாள் முதல்­வர் சித்­த­ரா­மையா, காங்­கி­ரஸ் மாநி­லத் தலை­வர் டி.கே.சிவ­கு­மார் இரு­வ­ரின் ஆத­ர­வா­ளர்­களும் தங்­கள் தலை­வர்­தான் முதல்­வ­ராக வேண்­டும் என்று கங்­க­ணம் கட்­டி­னர்.

இத­னி­டையே, காங்­கி­ரஸ் மூத்த தலை­வர்­க­ளான சுஷில்­குமார் ஷிண்டே, தீபக் பவா­ரியா, பன்­வார் ஜிதேந்­திர சிங் தலை­மை­யில் பெங்­க­ளூ­ரில் நேற்று நடை­பெற்ற எம்எல்ஏக்­கள் கூட்­டத்­தில், கர்­நா­டக முதல்­வ­ரைத் தேர்ந்­தெ­டுக்­கும் அதி­கா­ரத்தை காங்­கி­ரஸ் தலை­மைக்கு வழங்க கூட்­டத்­தில் ஒரு­ம­ன­தா­கத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

அதை­ய­டுத்து, காங்­கி­ரஸ் தேசிய தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே, டி.கே.சிவ­கு­மார், சித்­த­ரா­மையா இரு­வ­ரை­யும் தனித்­தனியே சந்­தித்­துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னார்.

பிறகு சித்­த­ரா­மை­யா­வும் சிவ­கு­மா­ரும் புது­டெல்­லி­யில் காங்­கிரஸ் மூத்த தலை­வர் ராகுல் காந்­தியை தனித்­த­னி­யா­கச் சந்­தித்­த­னர்.

இப்­படி கர்­நா­டக முதல்­வர் யார் என்­பது குறித்து குழப்­பம் நிலவி வந்த நிலை­யில், இன்­னும் 48 மணி நேரத்­தில் கர்­நா­ட­கா­வில் புதிய அமைச்­ச­ரவை பத­வி­ ஏற்­கும் என தெரி­விக்­கப்­பட்­டு உள்­ளது.

முதல்­வ­ராக சித்­த­ரா­மை­யாவை காங்­கி­ரஸ் கட்சி மேலி­டம் அறி­விக்க உள்­ள­து என்றும் டி.கே. சிவ­கு­மா­ருக்கு துணை முதல்­வர் பத­வி­யும் முக்­கிய அமைச்­சர் பொறுப்­பு­களும் ஒதுக்­கப்­ப­ட­லாம் என்றும் முன்­ன­தாக ஊட­கங்­களில் தக­வல்­கள் வெளி­யா­கின. ஆனால், முதல்­வ­ரைத் தேர்ந்­தெடுப்­பது குறித்து இன்னும் பேச்­சு­வார்த்தை நடந்து வரு­கிறது என்றும் வதந்­தி­களை நம்ப வேண்­டாம் என்­றும் காங்­கி­ரஸ் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

காங்­கி­ரஸ் தலை­மை­யு­டன் தீவி­ர­மாக கலந்­தா­லோ­சித்த பிறகு, கர்­நா­டக முதல்­வர் யார் என்­பதை திரு மல்­லி­கார்­ஜுன கார்கே விரை­வில் அறி­விப்­பார் என்று கர்­நா­டக காங்­கி­ரஸ் மேலிடப் பொறுப்­பா­ளர் ரந்தீப் சிங் சுர்­ஜே­வாலா தெரி­வித்தார்.

இது தொடர்­பாக செய்­தி­யா­ளர்­க­ளி­டம் நேற்று பேசிய அவர், "கர்­நா­டக முதல்­வர் யார் என்­பது குறித்து விரை­வில் தெரி­விக்­கப்­படும். முதல்­வர் பத­வி­யேற்பு தொடர்­பாக வெளி­வ­ரும் வதந்­தி­களை யாரும் நம்ப வேண்­டாம். பாஜ­க­வால் பரப்­பப்­படும் வதந்­தி­களையோ ஊகத்­தின் அடிப்­ப­டை­யி­லான செய்­தி­க­ளையோ வெளி­யிட வேண்­டாம். கர்­நா­ட­கா­வில் அடுத்த 48 மணி நேரத்­தில் புதிய அமைச்­ச­ரவை பத­வி­யேற்­கும்," என்­றார்.

இந்­நி­லை­யில், முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக சித்­த­ரா­மையா, சிவ­கு­மா­ரின் வீடு­களுக்கு வெளியே பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.