அரசு அலுவலகத்தில் கட்டுக்கட்டாகச் சிக்கிய ரூ.2000 நோட்டு

அரசு அலுவலகத்தில் கட்டுக்கட்டாகச் சிக்கிய ரூ.2000 நோட்டு

1 mins read
b89df92a-6596-4c70-9d02-0fdf426385ea
-

இந்தியாவின் ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை ரூ.2000 நோட்டுகளை மீட்டுக்கொள்ளப்போவதாக அறிவித்த மறுநாளே ராஜஸ்தான் அலுவலகத்தில் கட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டுக்கள் சிக்கியுள்ளன.

ஜெய்ப்­பூர் அரசு தக­வல் தொழில்­நுட்ப அலு­வ­ல­க­மான யோஜன பவன் கட்­டடத்­தின் அடித்­த­ளத்­தில் கேட்­பா­ரற்­றுக் கிடந்த ரூ.2.31 கோடி, ஒரு கிலோ தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டு உள்ளது. இதன் தொடர்­பில் குறைந்­தது எழு­வரை காவல்­து­றை­ யினர் கைது செய்­துள்­ள­னர். அர­சாங்க அலு­வ­ல­கத்­தின் கூடு­தல் இயக்­கு­நர் மஹேஷ் குப்தா தக­வல் கொடுத்­த­தைத் தொடர்ந்து ரொக்­கப் பணத்­தை­யும் தங்­கத்­தை­யும் ஜெய்ப்­பூர் காவல்­து­றை­யி­னர் பறி­மு­தல் செய்­த­னர்.

வெள்­ளிக்­கி­ழமை இரவு செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பேசிய தலை­மைச் செய­லா­ளர் உஷா சர்மா, ஜெய்ப்­பூர் காவல்­துறை ஆணை­யர் ஆனந்த் ஸ்ரீவஸ்­தவா, அலு­வ­ல­கத்­தின் அடித்­த­ளத்­தில் பண­மும் தங்­க­மும் பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்­தது என்று தெரி­வித்­த­னர்.

அடித்­த­ளத்­தில் பூட்­டப்­பட்டு இருந்த இரண்டு அல­மா­ரி­க­ளின் சாவி­யைத் தேடி எடுத்து காவல்­து­றை­யி­னர் திறந்து பார்த்­த­னர். அப்­போது அல­மா­ரி­யில் இருந்த பையைத் திறந்­து­பார்த்­த­போது கட்­டுக்­கட்­டாக ரூ.2000 நோட்­டு­களும் தங்­கக் கட்­டி­களும் இருந்­தன. மொத்­தம் 2.31 கோடி ரூபாய் ரொக்­க­மும் ஒரு கிலோ தங்­க­மும் பறி­மு­தல் செய்­யப்­பட்­ட­தாக காவல் துறை தெரி­வித்­தது.

பணத்­தை­யும் தங்­கத்­தை­யும் பதுக்­கி­வைத்­த­வர்­கள் யார் என்று விசா­ரணை தொடங்­கி­யி­ருக்­கிறது. இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் ஏழு முதல் எட்­டுப்­ பேர் விசா­ரணை வலைக்­குள் கொண்டு வரப்­பட்­டுள்­ள­னர்.