மலேசியாவின் ஜோகூரில் உள்ள சுங்கை மாசாயில் ஒரு சிறுவன் ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டான். மற்றொரு சிறுவனைக் காணவில்லை. வெள்ளிக்கிழமை இரவு 11.31 மணியளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாகக் கூறிய பாசிர் குடாங் தீயணைப்பு, மீட்பு நடவடிக்கை குழுவின் தளபதி சர்ஹான், மொத்தம் 19 பேர் குழந்தைகளைத் தேடும் பணியில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் தேடும் பணி நடைபெற்றது.
சனிக்கிழமை காலை 5.06 மணியளவில் முதல் சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுவன் ஆற்றில் விழுந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் உடல் மிதந்து கொண்டிருந்தது.
மருத்துவ அதிகாரிகள், 11 வயது சிறுவன் முஹமட் டேனிஷ் அஹமட் இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
இதையடுத்து விசாரணைக் காக சிறுவனின் உடல் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
மற்றொரு 13 வயது சிறுவனை தொடர்ந்து தேடி வருகிறோம் என்று திரு சர்ஹான் தெரிவித் தார்.

