மு.க.ஸ்டாலின் நாளை சிங்கப்பூர் வருகை

மு.க.ஸ்டாலின் நாளை சிங்கப்பூர் வருகை

2 mins read
1c1eabe6-2ddf-4597-9db5-1b6b7a22ff6c
-

முன்னேற்பாடுகளைக் கவனிக்க தமிழ்நாட்டு அமைச்சர் டிஆர்பி ராஜா வந்திறங்கினார்

தமிழ்­நாட்­டுக்கு அதிக தொழில் முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தற்­காக 2024 ஜன­வ­ரி­யில் உலக முத­லீட்­டா­ளர் மாநாடு சென்­னை­யில் நடை­பெற உள்­ளது.

வெளி­நா­டு­களில் உள்ள தொழி­ல­தி­பர்­களை நேரில் சந்­தித்து மாநாட்­டுக்கு அழைக்­க­வும் தமிழ்­நாட்­டில் தொழில் தொடங்­கு­மாறு அவர்­க­ளைக் கேட்­டுக்­கொள்­ள­வும் முதல்­வர் மு.க. ஸ்டா­லின் சில நாடு­க­ளுக்­குச் செல்­கி­றார். நாளை தமது பய­ணத்­தைத் தொடங்­கும் அவர் முத­லில் சிங்கப்­பூ­ருக்கு வரு­கி­றார்.

நாளை மறு­தி­னம் இங்கு ஏற்­பாடு செய்­யப்­பட்டு இருக்­கும் தமிழ்­நாட்டு முத­லீட்டு மாநாட்­டில் ஸ்டா­லி­னு­டன் தமிழ்­நாட்டு தொழில்­துறை அமைச்­சர் டிஆர்பி ராஜா­வும் அந்த மாநி­லத்­தின் பல்­வேறு துறைகளின் உயர் அதி­கா­ரி­களும் பங்­கேற்­கி­றார்­கள். சிங்­கப்­பூர் இந்திய வர்த்­தக, தொழிற்­சபை­யும் (சிக்கி) 'கைடன்ஸ் இந்­தியா' அமைப்­பும் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

சிங்­கப்­பூ­ரின் போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ரும் வர்த்­தக உற­வு­களுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரு­மான எஸ். ஈஸ்­வ­ரன் இந்த மாநாட்டில் பங்­கேற்­பார் என கடந்த வாரம் 'சிக்கி' தனது அறிக்­கை­யில் தெரி­வித்­தி­ருந்­தது.

இந்­தி­யத் தூதர் பி.கும­ரன், சிக்கி தலை­வர் நீல் பரேக் ஆகி­யோ­ரு­டன் தமிழ்­நாடு மற்­றும் சிங்­கப்­பூர் அர­சாங்­கங்­க­ளின் அதி­கா­ரி­கள், சிக்கி நிர்­வா­கி­கள் உட்­பட ஏறக்­கு­றைய 350 பேர் மாநாட்­டில் பங்­கேற்­பார்­கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தமி­ழக நக­ரங்­களில் உள்ள முத­லீட்டு வாய்ப்­பு­கள் பற்றி மாநாட்­டில் ஆரா­யப்­பட உள்­ளது. மாநாட்டு முடி­வில் சில உடன்­பாடு­கள் கையெ­ழுத்­தா­கும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

திரு ஸ்டா­லின் வரு­கைக்­கான ஏற்­பா­டு­களை இங்­குள்ள அமைப்­பி­ன­ரு­டன் இணைந்து கவ­னிக்க தமி­ழக அமைச்­சர் டிஆர்பி ராஜா நேற்று சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கி­ய­தாக இந்­திய ஊட­கங்­கள் தெரி­வித்­தன.

சிங்­கப்­பூர் இந்­திய வர்த்­த­கத் தலை­வர்­கள் தமிழ்­நாட்டு வர்த்­த­கத் தலை­வர்­க­ளு­டன் தொடர்­பு­கொள்ள உத­வி­பு­ரி­வ­தில் சிக்கி மகிழ்­வ­தாக அதன் தலை­வர் நீல் பரேக் கூறி­னார்.

அதே­போல, தமிழ்­நாட்­டில் வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள் தொழில் தொடங்­கு­வ­தன் மூலம் அங்­குள்ள மக்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பை அதி­க­ரிக்­கும் திட்­டங்­களை ஸ்டா­லின் அர­சாங்­கம் வகுத்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரைத் தொடர்ந்து ஜப்­பா­னுக்­கும் லண்­ட­னுக்­கும் ஸ்டா­லின் செல்­லவிருப்பதாகச் செய்தி கள் தெரிவித்தன.