தொற்றுநோய்களை முளையிலேயே கிள்ளி எறிய புதிய நடவடிக்கை

தொற்றுநோய்களை முளையிலேயே கிள்ளி எறிய புதிய நடவடிக்கை

1 mins read

கொவிட்-19 போன்று புதி­தாக உரு­வெ­டுக்­கும் தொற்­று­நோய் அபா­யத்தை நாடு­கள் உட­னுக்­கு­டன் கண்­ட­றிந்து ஒன்­றுக்­கொன்று உத­வும் வித­மாக புதிய கட்­ட­மைப்பு ஒன்றை உலக சுகா­தார நிறு­வ­னம் தொடங்கி உள்­ளது.

ஆரம்­ப­கட்­டத்­தி­லேயே புதிய தொற்­று­நோயை அறிந்து தக­வல்­களை நாடு­கள் பரி­மா­றிக்­கொள்­வ­தன் மூலம் அந்­நோய் பர­வு­வதைத் தடுக்க இய­லும். அந்த நோக்­கத்­து­டன் உரு­வாக்­கப்­பட்­டுள்ள புதிய கட்­ட­மைப்­புக்கு 'ஐபி­எஸ்­என்' எனப் பெய­ரி­டப்­பட்டுள்­ளது. நோய் தொற்­றி­ய­வ­ரி­டம் இருந்து மாதி­ரி­களை எடுப்­ப­தி­லும் அவற்றை ஆராய்­வ­தி­லும் தற்­போதுள்ள நடை­மு­றை­களை மேம்­ப­டுத்­த­வும் நாடு­க­ளை­யும் வட்­டா­ரங்­க­ளை­யும் இணைக்­க­வும் பொதுத்­த­ளம் ஒன்று உரு­வாக்­கப்­படும் என்­றது நிறு­வ­னம்.

சுகா­தார மிரட்­டல்­க­ளை ஒன்­றோடு ஒன்று பகிர்ந்து, ஒன்­று­பட்டுப் போரா­டி­னால் சுகா­தா­ரப் பாது­காப்­பில் வெற்றி கிட்­டும் என்­பதை கொவிட்-19 கொள்­ளை­நோய் நன்கு உணர்த்தி இருப்­ப­தாக நிறு­வ­னத்­தின் தலைமை இயக்­கு­நர் டெட்­ரோஸ் கேப்­பி­ரி­யே­சஸ் கூறி­னார். மேலும், புதி­தா­கத் தொடங்­கப்­பட்­டுள்ள கட்­ட­மைப்பு உலக சுகா­தா­ரப் பாது­காப்­பில் முக்­கிய பங்கு வகிக்­கும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.