இந்தத் தலைமுறையில் உலகின் பாதுகாப்புக்கும் வளப்பத்துக்கும் சீனா பெரும் சவாலாகத் திகழ்கிறது என்று பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ாளர்.
ஜப்பானில் நடைபெறும் ஜி7 உச்சநிலை மாநாட்டில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீனா மட்டுமே உலகக் கட்டொழுங்கை மாற்றியமைக்கும் நோக்கம் கொண்டதாகத் தெரிவித்தார்.
இருப்பினும், இதுபோன்ற சவால்களைத் தணிக்க பிரிட்டனும் இதர ஜி7 நாடுகளும் பொதுவான அணுகுமுறையைப் பின்பற்றும் என்றார் திரு சுனக்.
"நமக்குள் உள்ள அபாயத்தை நாமே குறைக்கக்கூடியவர்கள் என்பதை உறுதி செய்ய ஜி7 நாடுகளும் பிற நாடுகளும் இணைந்து செயல்படுவோம். மேலும், சீனாவால் நாம் அனுபவித்த விநியோகத் தொடர் பாதிப்புகள் இனியும் ஏற்படாதிருக்க ஒத்துழைப்போம்.
"நாடுகள் ஒன்றை ஒன்று சேதப்படுத்திக்கொள்வதைத் தவிர்க்க, எதிர்த்தரப்பு செயல்பாடுகளில் இருந்து எங்களை நாங்களே பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்," என்று அவர் விவரித்தார்.
இதற்கிடையே, ஜி7 மாநாட்டில் உக்ரேன் அதிபர் வெலோடிமிர் ஸெலென்ஸ்கியைச் சந்தித்த இந்தியப் பிரதமர் மோடி, உக்ரேன் நெருக்கடி தீர இந்தியா தன்னால் ஆனதைச் செய்யும் என்று உறுதியளித்தார்.
உக்ரேன் மீது ரஷ்யா படை எடுத்த பின்னர் இந்த இரு தலைவர்களும் நேரில் சந்தித்துக்கொள்வது இதுவே முதல்முறை.

