தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடந்த பத்தாண்டில் ஆயுட்காலம் அதிகரிப்பு

2 mins read
ff31e7a8-545c-4e85-ba84-07a1e5b61cc4
ஆயுட்­கா­லம் 2021ஆம் ஆண்­டில் குறைந்­த­தற்கு பெரும்­பா­லும் கொவிட்-19 நோயால் உயி­ரி­ழந்­தோ­ரின் அதி­க­ரிப்பு கார­ண­மா­கும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடந்த பத்­தாண்­டு­களில் (2012 முதல் 2022 வரை) சிங்­கப்­பூ­ரில் வசிப்­போ­ரது ஆயுட்­கா­லம் மேம்­பட்­டுள்­ளது. இருப்­பினும் கொவிட்-19 கொள்­ளை­நோ­யால் பாதிக்­கப்­பட்ட 2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை­யி­லான கால­கட்­டத்­தில் இந்­நிலை இல்லை.

ஆயுட்­கா­லம் 2021ஆம் ஆண்­டில் குறைந்­த­தற்கு பெரும்­பா­லும் கொவிட்-19 நோயால் உயி­ரி­ழந்­தோ­ரின் அதி­க­ரிப்பு கார­ண­மா­கும்.

2020ஆம் ஆண்­டில் குழந்தை பிறக்­கும்­போது ஆயுட்­கா­லம் 83.7 ஆண்­டு­கள் என்­றி­ருந்­தது. அது 2021ல் 83.2 ஆண்­டு­க­ளா­க­வும் 2022ல் 83.0 ஆண்­டு­க­ளா­க­வும் குறைந்­தது.

உயி­ரி­ழப்பு விகி­தம் 2020, 2021 ஆண்­டு­களில் அதி­க­ரித்த நிலை­யில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் ஆயுட்­கா­ல­மும் குறைந்­தி­ருந்­தது. கொள்­ளை­நோய்க் கால­கட்­டத்­தில் ஏற்­பட்ட அளவுக்­க­தி­மான மர­ணங்­களே இதற்­குக் கார­ண­மா­கும்.

'அள­வுக்­க­தி­மான மர­ணங்­கள்' எனும்­போது கொள்­ளை­நோய் தொடங்­கி­ய­தி­லி­ருந்து வெவ்­வேறு கார­ணங்­களால் உயி­ரி­ழந்­தோ­ரின் எண்­ணிக்­கை­யும் கொள்­ளை­நோய் இல்­லா­த­போது உயி­ரி­ழந்­தோ­ரின் எண்­ணிக்­கை­யும் ஒப்­பி­டப்­படும்.

இத்­த­ர­வு­கள் நேற்று புள்­ளி­வி­வ­ரத் துறை­யின்­சிங்­கப்­பூர் குடி­யி­ருப்­பா­ளர்­களுக்­கான முழு­மை­யான வாழ்க்கை அட்­ட­வணை 2021-2022 என்ற வரு­டாந்­திர அறிக்­கை­யில் இடம்­பெற்­றி­ருந்­தன.

2022ல் புதி­தா­கப் பிறக்­கும் குழந்­தை­கள் 83.0 ஆண்­டு­கள் வரை வாழ்­வர் என்­றும் 2012ல் பதி­வான 82.1 ஆண்­டு­க­ளைக் காட்­டி­லும் இது அதி­கம் என்­றும் கண்­ட­றி­யப்­பட்­டது.

இருப்­பி­னும் 2021ன் ஆயுட்­கா­லத்­தைக் காட்­டி­லும் இது 0.2 ஆண்­டு­கள் குறைவு. கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லுக்கு முந்­தைய ஆண்­டான 2019ன் 83.7 ஆண்­டு­க­ளைக் காட்­டி­லும் 0.7 ஆண்­டு­கள் குறைவு.

1957ல் முதன்­மு­த­லாக ஆயுட்­கா­லம் தொடர்­பான தர­வு­கள் கிடைத்­ததை அடுத்து குழந்­தைப் பிறப்­பில் பதி­வான முதல் ஆயுட்­கா­லச் சரிவு இது­வா­கும்.

தொடர்ந்து சிங்­கப்­பூ­ரில் பிறக்­கும் குழந்­தை­க­ளின் ஆயுட்­கா­லம் கடந்த பத்­தாண்­டில் முன்­னேற்­றம் கண்டு வரு­கிறது.

ஆண்­க­ளுக்­கான ஆயுட்­கா­லம் 80.7 ஆண்­டு­கள் என்­றும் பெண்­க­ளுக்­கான ஆயுட்­கா­லம் 85.2 ஆண்­டு­கள் என்­றும் 2022ல் கண்­ட­றி­யப்­பட்­டது. 10 ஆண்டு­க­ளுக்கு முன் பதி­வான எண்­ணிக்­கை­யைக் காட்­டி­லும் இது 0.9 ஆண்­டு­கள் அதி­கம்.

இந்­நி­லை­யில், 2022ல் பிறந்த ஆண்களில் 89.4 விழுக்­காட்­டி­னர் 65 வய­தில் உயி­ரு­டன் இருப்­பர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. 2012ல் இது 88.2 விழுக்­கா­டாக இருந்­தது. பெண்களில் 94 விழுக்­காட்­டி­னர் 65 வய­தில் உயி­ரோடு இருப்­பர் என்­றும் 2012ல் இது 93 விழுக்­கா­டாக இருந்­தது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.