தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

என்னிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை: அமைச்சர் சண்முகம்

2 mins read

ரிடவ்ட் ரோடு சொத்து வாட­கைக்கு விடப்­பட்ட விவ­கா­ரம் குறித்து நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம், தவறு ஏதே­னும் நடந்­துள்­ளதா என்­பதைக் கண்­ட­றிய சுயேச்சை மறு­ஆய்வு நடத்த தாம் பரிந்­து­ரைத்­த­தா­கக் கூறி­னார்.

"யார் சம்­பந்­தப்­பட்­டி­ருந்­தா­லும் சரி, செயல்பாடு நம்பகமான முறையில் இயங்­கு­கி­றதா என்­பதை உறு­தி­செய்ய இது­போன்ற அணுகு­முறை நமக்­குத் தேவை. அமைச்­சர்­க­ளின் நம்பகத்தன்மை குறித்த ஐயங்­களை மோச­ம­டைய விடவோ அவற்­றுக்­குப் பதி­ல­ளிக்­கா­மல் விட்­டு­வி­டவோ கூடாது," என்று அவர் சொன்­னார்.

"என்­னி­டம் மறைப்­ப­தற்கு ஒன்று­மில்லை. உண்மை விவ­ரங்­களை வெளி­யிட்டு நாடா­ளு­மன்­றம், மக்­க­ளி­டம் அவற்றை முன்­வைக்க வேண்­டும். நம்­பிக்­கை­யைத் தக்­க­வைக்க அதுவே ஒரே வழி. நாடா­ளு­மன்­றம் ஜூலை­யில் கூடும்­போது, இது­கு­றித்த கேள்வி­கள் கையா­ளப்­படும்," என்­றும் திரு சண்­மு­கம் விவ­ரித்­தார்.

இந்த விவ­கா­ரம் குறித்து கடு­மை­யான குற்­றச்­சாட்­டு­கள் முன்­வைக்­கப்­பட்டு இருப்­ப­தா­கச் சொன்ன அவர், என்­றா­லும், "நாங்­கள் எப்­படி நடந்­து­கொண்­டோம் என்­பது குறித்து நாங்­கள் தன்­னம்­பிக்­கை­யு­டன் உள்­ளோம். என­வே­தான், சுயேட்சை மறு­ஆய்வு நடத்­து­மாறு பிர­த­ம­ரி­டம் நாங்­கள் கோரி­னோம்," என்­றார்.

தமக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­கள் குறித்து கருத்­து­கள் கேட்­கப்­பட்­ட­தற்கு, "மூத்த அமைச்­சர் டியோ­வின் மறு­ஆய்வு முடி­யும்­வரை நான் பெரி­தாக கருத்­து­ரைக்க விரும்­ப­வில்லை. ஆனால், தனிப்­பட்ட முறை­யில் பேசும்­போது, குற்­றச்­சாட்­டு­கள் மோச­மா­னவை என்று கூறு­வேன். மறு­ஆய்வு முடி­யட்­டும். உண்மை வெளி­வ­ரட்­டும். அதன்­பின் நான் பதில் கூறு­வேன். தவறு நடந்­தி­ருப்­பது மறு­ஆய்­வில் தெரி­ய­வந்­தால், என்ன நடக்­கும் என்­பது பற்றி உங்­க­ளுக்­குத் தெரி­யும்," என்­றார் திரு சண்முகம். இதற்­கி­டையே, இந்த விவ­காரம் குறித்து மறு­ஆய்வு நடத்த பிர­த­மர் லீ ஏற்­றுக்­கொண்­ட­தற்­கும் நாடா­ளு­மன்­றத்­தில் முழு விவா­தம் இடம்­பெ­று­வ­தற்கு முன்பு, சம்­பந்­தப்­பட்ட உண்­மை­கள், முடி­வு­களை வெளி­யி­டு­வதற்கும் தாம் மிகுந்த மகிழ்ச்சி கொள்­வ­தாக டாக்­டர் விவியன் பாலகிருஷ்ணன் செய்­தி­யா­ளர்­களி­டம் கூறி­னார்.