ஜோ லோவை நாடுகடத்த உலக அமைப்புகளுடன் மலேசிய அரசு செயல்படுகிறது

ஜோ லோவை நாடுகடத்த உலக அமைப்புகளுடன் மலேசிய அரசு செயல்படுகிறது

1 mins read

அனைத்­து­லக அமைப்­பு­கள் உட­னான ஒத்­து­ழைப்­பின் மூலம், மலே­சி­யா­வி­லி­ருந்து தப்­பி­யோ­டிய தொழி­ல­தி­பர் ஜோ லோவை விரைந்து நாடு­க­டத்த மலே­சிய அர­சாங்­கம் செயல்­பட்டு வரு­வ­தாக சட்ட, கழக சீர்­தி­ருத்­தங்­களுக்­குப் பொறுப்பு வகிக்­கும் பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் அஸ­லினா ஒத்­மான் தெரி­வித்­து உள்­ளார்.

அர­சாங்க முயற்­சி­களில் மலே­சிய ஊழல் தடுப்பு ஆணை­ய­மும் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக அவர் கூறி­னார்.

"ஜோ லோ தொடர்­பி­லான அனைத்­துத் தக­வல்­க­ளை­யும் பெற வெளி­நாட்டு அம­லாக்க அமைப்­பு­க­ளு­டன் ஊழல் தடுப்பு ஆணை­யம் ஒத்­து­ழைத்து வரு­கிறது.

"ஜோ லோவை மலே­சி­யா­வுக்குக் கொண்டு வரு­வ­தன் தொடர்­பி­லான நடை­மு­றையை வேகப்­படுத்த அர­ச­தந்­திர ரீதி­யிலாக வெவ்­வேறு முயற்­சி­களும் பேச்­சு­வார்த்­தை­களும் இடம்­பெற்று வரு­கின்­றன," என்று நாடா­ளு­மன்­றத்­தில் அளித்த எழுத்­து­பூர்வ பதி­லில் திரு­வாட்டி அஸ­லினா குறிப்­பிட்­டார்.

1எம்­டிபி வழக்­கில் ஜோ லோ சம்­பந்­தப்­பட்­டி­ருப்­பது குறித்து 2018லிருந்து அவ­ருக்கு எதி­ராக அனைத்­து­லக காவல்­துறை சிவப்பு எச்­ச­ரிக்­கையை ஆணை­யம் விடுத்­தி­ருந்­த­தாக திரு­வாட்டி அஸ­லினா சொன்­னார்.