தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எவரெஸ்ட் மலையில் காணாமல்போன சிங்கப்பூரரைத் தேடும் பணி தொடர்கிறது

2 mins read
b41f339a-e9c8-4100-90be-fc75469518b9
-
multi-img1 of 2

எவ­ரெஸ்ட் மலை சிக­ரத்­தைத் தொட்டு பின்­னர் காணா­மல்­போன சிங்­கப்­பூ­ரர் ஸ்ரீநி­வாஸ் சைனிஸ் தத்தாத்ரேயா, 39, என்­ப­வ­ரைத் தேடும் பணி தொடர்ந்து இடம்­பெற்று வரு­கிறது.

மீட்­புக் குழு­வைச் சந்­திக்க திரு ஸ்ரீநி­வா­சின் குடும்­பத்­தி­னர் நேப்­பா­ளம் சென்­றுள்­ள­தாக நேப்பா­ளத்­தைச் சேர்ந்த பயண ஏற்­பாட்­டா­ளர் பிர­காஷ் சந்­திரா தேவ்­கோடா தெரி­வித்­தார்.

அவ­ரது நிறு­வ­ன­மும் 'செவன் சமிட் டிரேக்ஸ்' எனும் பயண நிறு­வ­ன­மும் இணைந்து திரு ஸ்ரீநி­வா­சின் மலையே­றும் நட­வ­டிக்­கைக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தன.

இந்­நி­லை­யில், ஷெர்பா வழி­காட்­டி­கள் மூவர் அடங்­கிய குழுக்­கள் திரு ஸ்ரீநி­வாசை தேடும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­தாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்­சி­டம் திரு தேவ்­கோடா நேற்று முன்­தி­னம் கூறி­னார்.

மே 19ஆம் தேதி திரு ஸ்ரீநி­வாஸ் எவ­ரெஸ்ட் மலை உச்­சி­யைத் தொடு­வ­தைக் காட்­டும் புகைப்­ப­டங்­களை திரு தேவ்­கோடா பகிர்ந்­தார்.

'ஜேஎல்­எல் டெக்­னா­ல­ஜிஸ்' சொத்து தொழில்­நுட்ப நிறு­வ­னத்­தில் மென்­பொ­ருள் பொறி­யி­யல் துறை மூத்த மேலா­ள­ரான திரு ஸ்ரீநி­வாஸ், அப்­போது ஆரஞ்சு நிற குளிர்­கால ஆடை, கண்­ணாடி, உயிர்­வா­யுக் கவ­சத்தை அணிந்­தி­ருந்­தார்.

மற்­றொரு படத்­தில், திரு ஸ்ரீநி­வாஸ் படுத்­தி­ருக்க, மூவர் அவ­ரைச் சூழ்ந்­தி­ருந்­த­னர். திறன்­பேசியைக் கொண்டு ஒரு­வர் திரு ஸ்ரீநி­வாசை பட­மெ­டுத்­தார்.

தாம் எவ­ரெஸ்ட் உச்­சியை அடைந்­து­விட்­ட­தாக கடந்த வெள்ளிக்­கி­ழமை தம் மனைவி சுஷ்மா சோமா­வுக்கு திரு ஸ்ரீநி­வாஸ் செயற்­கைக்­கோள் தொலை­பேசி மூலம் குறுந்­த­க­வல் அனுப்பி­ இருந்­தார்.

எனி­னும், அதிக உய­ரத்­தில் ஏற்­ப­டக்­கூ­டிய 'ஹேஸ்' எனும் கடும் நோய் பாதிப்­பால் தாம் அவ­தி­யுற்­ற­தாக மனை­வி­யி­டம் திரு ஸ்ரீநி­வாஸ் அப்­போது கூறி­ இருந்­தார்.

திரு ஸ்ரீநி­வா­சு­டன் இருந்த இரு வழி­காட்­டி­களும் குழு­வில் இருந்த மற்­றொ­ரு­வ­ரும் மலை­யி­லி­ருந்து இறங்­கி­விட்­ட­தை­யும் ஆனால், தம் கண­வர் இறங்­க­வில்லை என்­ப­தை­யும் மறு­நாள் சனிக்­கி­ழமை அதி­காலை 2 மணிக்கு திரு­வாட்டி சுஷ்மா அறிந்­தார்.

நேற்று முன்­தி­னம் அவர் வெளி­யிட்ட இன்ஸ்­ட­கி­ராம் பதி­வில், "உங்­க­ளது செய்­தி­க­ளுக்­காக அனை­வ­ருக்­கும் நன்றி. உங்­க­ளது அன்­புக்­கும் அக்கறைக்­கும் நாங்­கள் நன்றிக்­கடன் பட்­டுள்­ளோம்," என்று குறிப்­பிட்­டார்.