இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்புவிழா: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்புவிழா: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

2 mins read

இந்­தி­யா­வின் புதிய நாடா­ளு­மன்றக் கட்­ட­டத்தை அந்­நாட்­டுப் பிர­த­மர் நரேந்­திர மோடி வரும் 28ஆம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழமை திறந்து வைக்­க­வுள்­ளார்.

இந்­நி­லை­யில், காங்­கி­ரஸ் உள்­ளிட்ட 19 எதிர்க்­கட்­சி­கள் அவ்­வி­ழா­வைப் புறக்­க­ணிக்­கப்­போ­வ­தாக அறி­வித்­துள்­ளன.

இதன் தொடர்­பில் எதிர்க்­கட்­சி­கள் கூட்­ட­றிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளன.

அவ்­வ­றிக்­கை­யில், "அதி­பர் திரௌ­பதி முர்­முவை ஒதுக்­கி­விட்டு, புதிய நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத்­தைப் பிர­த­மர் மோடி தானே திறந்­து­வைக்க முடி­வு­செய்­தி­ருப்­பது பெருத்த அவ­மா­னம் மட்­டு­மன்று, மக்­க­ளாட்­சி­யின் மீதான நேர­டித் தாக்­கு­தலும்­கூட.

"மக்­க­ளாட்­சி­யின் ஆன்மா பறிக்­கப்­பட்­டு­விட்ட நிலை­யில், புதிய கட்­ட­டத்­திற்கு எந்த மதிப்­பு­ம் இல்லை. அத­னால், புதிய நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத் திறப்பு­வி­ழா­வைப் புறக்­க­ணிப்­பது என்று கூட்­டாக முடி­வு எடுத்துள்ளோம்.

"சர்­வா­தி­கா­ரத்­து­டன் நடந்து­கொள்­ளும் பிர­த­ம­ருக்­கும் அவ­ரது அர­சாங்­கத்­திற்­கும் எதி­ரா­கத் தொடர்ந்து போரா­டு­வோம்.

"எங்­க­ளது இக்­க­ருத்தை மக்­க­ளி­டம் நேர­டி­யா­கக் கொண்டு செல்­வோம்," என்று எதிர்க்­கட்­சி­கள் தெரி­வித்­துள்­ளன.

காங்­கி­ரஸ், திரி­ணா­மூல் காங்­கி­ரஸ், திமுக, ஐக்­கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, தேசி­ய­வாத காங்­கி­ரஸ், கம்­யூ­னிஸ்ட் உள்­ளிட்ட 19 கட்­சி­கள் அக்­கூட்­ட­றிக்­கை­யில் கையெ­ழுத்­திட்­டுள்­ளன.

புதிய நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத் திறப்­பு­விழா அழைப்­பி­தழ் கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று வாட்ஸ்­அப் வழி­யாக அனைத்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் அனுப்பி வைக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இத­னி­டையே, புதிய நாடா­ளு­மன்­றக் கட்­ட­டம் பிர­த­மர் மோடி­யின் தொலை­நோக்­குப் பார்­வைக்கு ஓர் எடுத்­துக்­காட்டு என்­று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அத்­து­டன், திறப்­பு­விழா அழைப்­பி­தழ் எல்லா அர­சி­யல் கட்­சி­க­ளுக்­கும் அனுப்­பப்­பட்­டு­விட்­டது என்­றும் அந்­நி­கழ்­வில் அவர்­கள் கலந்­து­கொள்­வ­தும் கலந்­து­கொள்­ளா­த­தும் அவர்­களது உரிமை என்­றும் அவர் கூறி­னார்.