புதிய கட்டடத்தில் 'தமிழ்நாட்டுச் செங்கோல்'

புதிய கட்டடத்தில் 'தமிழ்நாட்டுச் செங்கோல்'

1 mins read
79f3e049-6bc0-4a16-9744-d31f94afe119
-
multi-img1 of 2

இந்­தி­யா­வின் புதிய நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத்­தில் வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க 'தமிழ்­நாட்­டுச் செங்­கோல்' வைக்­கப்­படும் என்று உள்­துறை அமைச்­சர் அமித் ஷா அறி­வித்­துள்­ளார்.

"இந்­திய வர­லாற்­றில் இச்­செங்­கோ­லுக்கு மிகுந்த முக்­கி­யத்­து­வம் உண்டு. இந்­தியா சுதந்­தி­ர­ம­டைந்­த­போது, பிரிட்­டி­ஷா­ரி­ட­மி­ருந்து அதி­கா­ரம் இந்­திய மக்­க­ளி­டம் கைமா­று­வ­தைக் குறிப்­பி­டும் வித­மாக, திரு­வா­வ­டு­துறை ஆதீ­னம் இந்­தச் செங்­கோலை இந்­தி­யா­வின் முதல் பிர­த­மர் நேரு­வி­டம் வழங்­கி­னார்," என்று திரு ஷா சொன்­னார்.

சோழர் காலத்­தில் பயன்­படுத்­தி­ய­தைப் போன்ற இந்­தச் செங்­கோல் ஆறடி நீள­மு­டை­யது; தங்க முலாம் பூசப்­பட்­டது. திறப்­பு­விழா நாளன்று பிர­த­மர் மோடி இந்­தச் செங்­கோ­லைப் பெற்­றுக்­கொள்­வார் என்­றும் அது நாடா­ளு­மன்ற நாய­க­ரின் இருக்­கைக்கு அருகே வைக்­கப்­படும் என்­றும் திரு ஷா கூறி­னார்.