அமெரிக்க அதிபர் பைடனைக் கொல்லப்போவதாக மிரட்டிய இந்திய வம்சாவளி இளையர்

அமெரிக்க அதிபர் பைடனைக் கொல்லப்போவதாக மிரட்டிய இந்திய வம்சாவளி இளையர்

1 mins read
7e25a34a-e70c-4e60-821b-5ab12e37567e
-

வெள்ளை மாளிகை அருகே பாது­காப்­புத் தடுப்­பு­கள்­மீது சரக்கு வாக­னத்தை மோதிய சம்­ப­வம் தொடர்­பில் 19 வயது இந்­திய வம்­சா­வளி இளை­யர் ஒரு­வர் அமெ­ரிக்­கா­வில் கைது­செய்­யப்­பட்­டார்.

கடந்த திங்­கட்­கி­ழமை இரவு இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது.

சாய் வர்­ஷித் கந்­துலா என்ற அந்த இளை­யரை விசா­ரித்­த­போது, அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னைத் தான் கொல்­லப்­போ­வ­தா­க­வும் அவர் மிரட்­டல் விடுத்ததாகக் கூறப்பட்டது. அதற்­காக அவர் ஆறு மாதங்­களாகத் திட்­ட­மிட்டு வந்­ததும் விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்தது.

வெள்ளை மாளி­கைக்­குள் நுழைந்து, அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­று­வதே தனது இலக்கு என்று விசா­ர­ணை­யின்­போது கந்­துலா கூறி­னார். அவர் ஓட்டி வந்த சரக்கு வாக­னத்­தில் ஆயுதம் எதுவும் கண்டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை என்­றும் வாக­னம் மோதி­ய­தால் எவ­ரும் காய­ம­டை­ய­வில்லை என்­றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

வாக­னத்­தைப் பொறுப்­பற்ற முறை­யில் இயக்­கி­யது, அதி­பரை, துணை அதி­பரை அல்­லது குடும்ப உறுப்­பி­ன­ரைக் கொல்ல அல்­லது கடத்த அல்­லது தாக்­கப்­போ­வ­தாக அச்­சு­றுத்­தி­யது, அர­சாங்­கச் சொத்­துக்­குச் சேதம் விளை­வித்­தது, அத்­து­மீறி நுழைந்­தது போன்ற குற்­றச்­சாட்­டு­கள் கந்­து­லா­மீது சுமத்­தப்­பட்­டுள்­ளன.

முன்­னாள் ஜெர்­மா­னிய சர்­வா­தி­கா­ரி­யான அடோல்ஃப் ஹிட்­ல­ரின் `நாஸி' கொள்கை தன்­னைப் பெரி­தும் கவர்ந்­துள்­ள­தா­க­வும் கந்­துலா கூறி­னார்.

பாது­காப்­புத் தடுப்­பு­கள்­மீது மோதிய வேகத்­தில் அவர் ஓட்­டிய வாக­னத்­தி­லி­ருந்து புகை கிளம்­பி­யது. அதன்­பின் வாகனத்தில் இருந்து இறங்­கிய அவர், அதன் பின்­னால் செரு­கி­யி­ருந்த நாஸி `ஸ்வஸ்­திகா' கொடி­யைப் பிடுங்­கி­ய­தா­க­வும் கூறப்­பட்­டது.