சிங்கப்பூரர்களின் நலனில் முழுக் கவனம்

சிங்கப்பூரர்களின் நலனில் முழுக் கவனம்

3 mins read

சிங்­கப்­பூ­ரின் பிர­த­ம­ராக எப்­போது பதவி ஏற்­பது என்­பது குறித்து இன்­னும் முடி­வெ­டுக்­க­வில்லை என்று துணைப் பிர­தமர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார். ஆனால் இது­கு­றித்து கூடிய விரை­வில் முடி­வெ­டுக்­கப்­படும் என்­றார் அவர்.

பிர­த­மராகப் பதவி ஏற்பது அடுத்த பொதுத் தேர்­த­லுக்கு முன்பு அல்­லது பிற­கு நடை­பெ­ற­லாம் என்று நிதி அமைச்­ச­ரு­மான திரு வோங் கூறி­னார். அடுத்த பொதுத் தேர்­தல் 2025ஆம் ஆண்­டுக்­குள் நடத்­தப்­பட வேண்­டும்.

அடுத்த பிர­த­ம­ரா­கப் பதவி ஏற்­பது குறித்து கடந்த ஆகஸ்ட் மாதத்­தில் அவர் வெளிப்­ப­டை­யா­கப் பேசி­னார்.

ஜப்­பான் தலை­ந­கர் தோக்­கி­யோ­வில் நடை­பெ­றும் 'ஃபியூச்­சர் ஆஃப் ஏஷியா' கருத்­த­ரங்­கில் திரு வோங் நேற்று கலந்து­கொண்­டார். பிர­த­மராகப் பதவி ஏற்பது குறித்து கலந்­து­ரை­யாடலின் நெறி­யா­ள­ரான நிக்­கே செய்தி நிறு­வ­னத்­தின் அனைத்­து­ல­கச் செய்­திப் பிரி­வின் தலை­வர் ஷிஜி­சா­புரோ ஒக்­கு­முரா கேட்ட கேள்­விக்­குப் பதில் அளிக்­கும் வகை­யில் திரு வோங்­கின் விளக்­கம் அமைந்­தது. 28வது 'ஃபியூச்­சர் ஆஃப் ஏஷியா' கருத்­த­ரங்­கில் வர்த்­த­கத் தலை­வர்­கள், கல்­வி­மான்­கள், ஊடகத் துறை­யி­னர் ஆகி­யோர் கலந்­து­கொண்­ட­னர்.

தமது பதவி ஏற்பு எப்­போது நடை­பெ­றும் என்று ஊட­கத் துறை­யி­னர் அடிக்­கடி கேள்வி எழுப்­பு­வதை திரு வோங் சுட்­டி­னார்.

ஆனால் தற்­போது சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் தொடர்­பான விவ­கா­ரங்­கள், சமூ­கக் கொள்­கை­களை மறு­ஆய்­வு செய்­வது ஆகி­ய­வற்­றுக்கு முன்­னு­ரிமை தரு­வ­தாக அவர் கூறி­னார்.

அது­மட்­டு­மல்­லா­மல், வெளி­நா­டு­களில் நடை­பெ­றும் முக்­கிய நிகழ்­வு­களில் கலந்­து­கொள்­வதை அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார். இம்­மா­தம் மட்­டும் ஜப்­பா­னுக்கு இரு­முறை பய­ணம் மேற்­கொண்­டி­ருப்­பதை அவர் சுட்­டி­னார்.

இதற்கு முன்பு நிகாட்­டா­வில் ஏழு நிதி அமைச்­சர்­க­ளுக்­கான கூட்­டத்­தில் அவர் கலந்­து­கொண்­டார்.

ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட உல்­லா­சத்­த­ளங்­கள், அமெ­ரிக்­கா­வின் ஜன­நா­யக உச்­ச­நிலை மாநாட்­டி­ல் கலந்துகொள்ள சிங்­கப்­பூருக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து எழுப்­பப்­பட்ட கேள்­வி­களுக்­குத் துணைப் பிர­த­மர் வோங் பதி­ல­ளித்­தார். அமெ­ரிக்­கா­வின் ஜன­நா­யக உச்­ச­நிலை மாநாடு இரண்டு முறை நடத்­தப்­பட்­டுள்­ளது. அதில் 100க்கும் மேற்­பட்ட நாடு­கள் கலந்­து­கொண்­டன.

ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட உல்­லா­சத்­த­ளங்­க­ளைப் பொறுத்­த­வரை, பல ஆண்­டு­கள் இழு­பறிக்­குப் பிறகு ஒசாக்­கா­வில் புதிய தளம் ஒன்­றைக் கட்ட ஜப்­பான் கடந்த மாதம் முதல்­முறை­யா­கப் பச்­சைக்­கொடி காட்­டி­யது.

சிங்­கப்­பூ­ரில் மரினா பே சேண்ட்ஸ், ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்­தோசா ஆகிய இரண்டு ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட உல்­லா­சத் தளங்­களும் உல­கத் தரம்­வாய்ந்த பொழு­து­போக்கு அம்­சங்­கள் கொண்ட நாடு எனத் தடம் பதிக்க சிங்­கப்­பூ­ருக்­குப் பெரி­தும் உத­வி­யி­ருப்­பதாக திரு வோங் கூறி­னார்.

அவற்­றின் மூலம் சிங்­கப்­பூ­ரில் புதிய வேலை­கள் உரு­வாகி­இ­ருப்­ப­தா­க­வும் சுற்­றுப்­ப­ய­ணத்­துறை மேம்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார். சூதாட்­டத்­துக்கு அடி­மை­யா­கும் பிரச்­சினை கவ­லைக்­கு­ரி­ய­தாக இருந்­தா­லும் தேவை­யான பாது­காப்பு அம்­சங்­களை நடை­முறைப்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தால் இப்­பி­ரச்­சி­னையை சமா­ளிக்க முடி­வ­தாக அவர் கலந்­து­ரை­யா­ட­லின்­போது கூறி­னார்.

அமெ­ரிக்­கா­வின் ஜன­நா­யக உச்­ச­நிலை மாநாட்­டில் கலந்துகொள்ள சிங்­கப்­பூருக்கு அழைப்பு விடுக்கப்படாதது பற்றி­யும் அவர் பேசி­னார்.

"எங்­கள் அடை­யா­ளம் பற்றி எங்­ளுக்கு நன்­றா­கவே தெரி­யும். அதில் எங்­க­ளுக்கு எவ்­வி­தப் பிரச்­சி­னை­யும் இல்லை. எங்­கள் அடை­யா­ளத்தைப் பற்றி எங்­களி­டமே எடுத்­துச் சொல்ல வெளி ஆட்­கள் அல்­லது மற்ற நாடு­களில் நடை­பெ­றும் நிகழ்­வு­கள் மூலம் கிடைக்­கும் அங்­கீ­கா­ரம் தேவை­யில்லை. தாரா­ள­ம­ய­மான ஜன­நா­யக அணு­கு­மு­றை­யைப் பின்­பற்­றும் மேற்­கத்­திய நாடு­க­ளின் பண்­பு­கள் சிங்­கப்­பூ­ரி­லும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டுள்­ளதா என்று கேட்­டால் அதற்­குப் பதில் இல்லை என்று சொல்­வேன்.

"மற்ற நாடு­க­ளின் அணு­கு­மு­றை­களை சிங்­கப்­பூர் கண்­மூடித்­த­ன­மா­கப் பின்­பற்­று­வ­தில்லை. எங்­கள் தேவை­க்கு ஏற்ப நாங்­கள் மாறு­வோம், தேவை­யா­ன­வற்­றைப் பற்றி கற்­றுக்­கொள்­வோம். சிங்­கப்­பூ­ரின் தனிப்­பட்ட தேவை­க­ளுக்கு ஏற்­பு­டைய அணு­கு­மு­றையை உரு­வாக்கி நடை­மு­றைப்­ப­டுத்­து­வோம். இந்த அணு­கு­முறை எங்­க­ளுக்கு இது­வரை நல்ல பல­னைத் தந்­துள்­ளது," என்று திரு வோங் கூறி­னார்.

அர­சாங்­கம் மீதும் அர­சாங்க அமைப்­பு­கள் மீதும் சிங்­கப்­பூ­ரர்­கள் அதிக நம்­பிக்கை வைத்­தி­ருப்­பதை அர­சாங்­கத்­தால் நடத்­தப்­ப­டாத பிற அமைப்­பு­க­ளின் ஆய்­வு­கள் காட்­டு­வதை அவர் சுட்­டி­னார். சிங்­கப்­பூ­ரின் அர­சி­யல் முறை நன்கு செயல்­பட்டு வரு­வ­தாக கூறிய திரு வோங், அது தொடர்ந்து மேம்­ப­டுத்­தப்­படும் எனத் தெரி­வித்­தார்.

"நாட்­டின் அர­சி­யல் முறை நிச்­ச­யம் காலத்­துக்கு ஏற்ப மாறும். ஆனால் அந்த மாற்­றத்தை சிங்­கப்­பூ­ரர்­கள் நிர்­ண­யிப்­பர், வெளி­நா­டு­கள் அல்ல," என்­றார் திரு வோங்.

சிங்­கப்­பூ­ரின் ஆளும் கட்­சி­யான மக்­கள் செயல் கட்சி என்­றென்­றும் ஆட்­சி பீடத்­தில் அமர்ந்­தி­ருக்­கும் என்று நினைத்­தால் அது வெறும் பிர­மை­யா­கி­வி­டும் என்­றார் அவர். மக்­கள் செயல் கட்சி ஒழுங்­காக செயல்­ப­டா­ம­ல் மக்­கள் அதி­ருப்தி அடைந்­தால் சிங்­கப்­பூ­ரின் அர­சாங்­க­மாக அவர்­கள் எதிர்க்­கட்­சி­யைத் தேர்ந்­தெ­டுக்­கக்­கூடும் என்று திரு வோங் கூறி­னார். வேலை­கள், வாழ்க்­கைச் செல­வி­னம் போன்ற சிங்­கப்­பூ­ரர்­கள் எதிர்­நோக்­கும் அன்­றாட வாழ்க்கைப் பிரச்சினைகளில் மக்­கள் செயல் கட்சி கவ­னம் செலுத்­து­வ­தாக அவர் தெரி­வித்­தார்.