சீனாவில் சமூக ஊடகம் வாயிலாக நேரலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு உயர்கல்வி மாணவர்கள் கத்தியால் தாக்கப்பட்டனர்.
இதில் ஒரு மாணவரின் கை துண்டிக்கப்பட்டது. இன்னொரு மாணவருக்கு முதுகில் காயங்கள் ஏற்பட்டதாக சீன ஊடகம் தெரிவித்தது.
கல்லூரி ஒன்றில் அந்த இருமாணவர்களும் இணையவாசிகளுடன் பேசிக்கொண்டிருந்தபோது கறுப்பு டீ-சட்டை அணிந்த ஒருவர் அவர்களை விரட்டி விரட்டித் தாக்கினார். அந்த இரு மாணவர்களுடன் அவர் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படு கிறது.
சம்பவ இடத்திலிருந்து தப்பிய ஆடவர் பிறகு கைது செய்யப்பட்டார். இந்தத் தாக்குதல் குறித்து சீனக் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

