தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாக்கிய முதலையை அடித்து விரட்டிய சிறுவன்

1 mins read
02977bf9-84ab-4135-84c8-e9727e46ca62
மலே­சி­யா­வின் சாபா மாநி­லத்­தில் உள்ள ஒரு கிரா­மத்­தில் 9 வயது சிறு­வன் மர­ணத்­தின் பிடி­யில் சிக்­கா­மல் உயிர் பிழைத்த விதம் அங்­குள்­ள­வர்­களை மெய்­சிலிர்க்க வைத்­துள்­ளது. படம்: த ஸ்டார் -

மலே­சி­யா­வின் சாபா மாநி­லத்­தில் உள்ள ஒரு கிரா­மத்­தில் 9 வயது சிறு­வன் மர­ணத்­தின் பிடி­யில் சிக்­கா­மல் உயிர் பிழைத்த விதம் அங்­குள்­ள­வர்­களை மெய்­சிலிர்க்க வைத்­துள்­ளது.

அச்­சி­று­வன் கட­லில் நீந்தி வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்­த­போது திடீ­ரென்று முதலை ஒன்று அவ­னைத் தாக்­கி­யது.

அப்­போது அச்­சி­று­வ­னு­டன் அவ­னது நண்­பர்­களும் இருந்­த­னர். இச்­சம்­ப­வம் கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று பிற்­ப­கல் 1 மணி அள­வில் சாபா­வில் உள்ள சண்­ட­கான் பகு­தியைச் சேர்ந்த பத்து பூத்தே கிரா­மத்­தில் நடை­பெற்­றது. கட­லுக்கு நடு­வில் அந்­தக் கிரா­மம் இருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது. முதலை கடித்­த­தில் சிறு­வ­னின் இடது கை, தோள்­பட்டை, தலை­யில் காயங்­கள் ஏற்­பட்­டன. ஆனால் சிறு­வன் தமது உயி­ருக்­கா­கப் போரா­டி­னான். கடு­மை­யான வலி ஏற்­பட்­ட­போ­தி­லும் முத­லையை அவன் அடித்து விரட்­டி­னான். அச்­சி­று­வன் முத­லை­யு­டன் போரா­டிக்­கொண்­டி­ருந்­த­போது அவ­னது தந்தை அவ்­வி­டத்­துக்கு விரைந்­தார். சிறு­வன் தொடர்ந்து அடித்­த­தில் வில­கிச் சென்­றது முதலை. சிறு­வ­னின் தந்தை அவனை உட­ன­டி­யாக தனி­யார் மருந்­த­கத்­துக்­குக் கொண்டு சென்­றார். அங்கு அவ­னுக்­குச் சிகிச்சை அளிக்­கப்­பட்­டது.

"சிறு­வ­னின் உடல்­நிலை சீராக உள்­ளது. அவ­னது கையில் எட்டு தையல்­கள் போடப்­பட்­டன," என்று சாபா வன­வி­லங்­குத் துறை தெரி­வித்­தது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாதிருக்க தாக்­கு­தல் நடந்த இடத்­தில் அது கண்­கா­ணிப்­புப் பணி­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.