ரஷ்யப் படைகளுக்கு எதிராக முழுவீச்சில் தாக்குதல்கள் தொடுத்து அவற்றைத் தனது மண்ணிலிருந்து விரட்டியடிக்க உக்ரேன் தயாராக இருப்பதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு மன்றச் செயலாளர் ஒலெக்சி டேனிலோவ் பிபிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் தாக்குதலை உக்ரேன் எப்போது தொடங்கும் என்று அவர் தெரிவிக்கவில்லை.
"தாக்குதல் நாளை தொடங்கலாம், மறுநாள் தொடங்கலாம், அல்லது ஒரு வாரம் கழித்துக்கூட தொடங்கலாம்," என்று அவர் கூறினார்.
ரஷ்யாவைத் தாக்குவதைத் தவிர உக்ரேனுக்கு வேறு வழி இல்லை என்று அவர் தெரிவித்தார். எனவே, ரஷ்யாவைத் தாக்க எடுக்கப்பட்ட முடிவிலிருந்து உக்ரேன் பின்வாங்கக்கூடாது என்றும் பின்வாங்கினால் அது மிகப் பெரிய தவறாகிவிடும் என்றும் திரு டேனிலோவ் எச்சரித்தார். ரஷ்யாவைத் தோற்கடிக்க கிடைத்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை உக்ரேன் நழுவவிட்டுவிடக்கூடாது என்றார் அவர்.
அடர்ந்த வனப்பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகளுடன் வியூகம் வகுக்கும் உக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி.
படம்: ஏஎஃப்பி

