மலைகளுடன் கலந்துவிட்டார்; மனைவி கண்ணீர் அஞ்சலி

2 mins read

எவ­ரெஸ்ட் மலை­யின் சிக­ரத்தை அடைந்து பிறகு காணா­மல் போன சிங்­கப்­பூ­ர­ரான திரு ஸ்ரீநிவாஸ் சைனிஸ் தத்தர­யா­வைத் தேடும் பணி­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டும் அவ­ரைக் கண்­டு­பிடிக்க முடி­ய­வில்லை என்று அவ­ரது மனைவி நேற்று இன்ஸ்­ட­கி­ரா­மில் பதி­விட்­டார்.

தமது கண­வ­ரைக் கண்­டு­பி­டிக்க மீட்­புக் குழு­வி­னர் தங்­க­ளால் முடிந்த அனைத்­தை­யும் செய்­த­தாக 36 வயது திரு­வாட்டி சுஷ்மா சோமா கூறி­னார். அத்­து­டன் தமது கண­வ­ருக்கு அஞ்­சலி செலுத்­தும் வகை­யில் அவ­ரது பதிவு அமைந்­தது.

"என் கண­வ­ருக்கு 39 வயது. அவர் பய­மின்றி, மிகச் சிறப்­பாக வாழ்ந்­தார். வாழ்க்­கையை முழு­மை­யாக அனு­ப­வித்­தார். கட­லின் ஆழத்­தைக் கண்­ட­றிந்­த­வர். மலை­யின் உச்­சிக்­கும் சென்­ற­வர்.

"அவ­ருக்கு மலை­கள் என்­றால் கொள்­ளைப் பிரி­யம். இறு­தி­யில் மலை­க­ளு­டன் அவர் கலந்­து­விட்­டார்.

"அவர் கண்ட கன­வு­கள் அசா­தா­ர­ண­மா­னவை. தமது கனவு, நட­வ­டிக்­கை­க­ளால் என்­ன­வெல்­லாம் நடக்­க­லாம் என்­பது அவ­ருக்கு நன்­றா­கவே தெரி­யும். அனைத்­திற்­கும் தயா­ராக இருந்­தார்," என்று திரு­வாட்டி சுஷ்மா பதி­விட்­டார்.

இம்­மா­தம் 19ஆம் தேதி­யன்று எவ­ரெஸ்ட் மலை­யின் சிக­ரத்தை திரு ஸ்ரீநி­வாஸ் அடைந்­தார். ஆனால் தமது உடல்­ந­லம் குன்­றி­ய­தா­க­வும் மலை­யி­லி­ருந்து கீழே இறங்­கும் சாத்­தி­யம் மிக­வும் குறைவு என்­றும் அவர் தமது மனை­வி­யி­டம் தெரி­வித்­தி­ருந்­தார்.

தமது கண­வர் மலை ஏறி­ய­போது அவ­ருக்கு வழி­காட்­டி­யாக இருந்த திரு டென்­டிக்கு திரு­வாட்டி சுஷ்மா நன்றி தெரி­வித்­துக்­கொண்­டார்.

தமது கண­வரை அவர் காப்­பாற்ற முயன்­ற­தா­க­வும் அதன் விளை­வாக அவர் காய­முற்று மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு சிகிச்சை பெற்றதாகவும் திரு­வாட்டி சுஷ்மா தமது பதவில் பகிர்ந்துகொண்டார்.