சோதனைச்சாவடியைக் கடக்கும் நேரம் குறைந்தது

சோதனைச்சாவடியைக் கடக்கும் நேரம் குறைந்தது

2 mins read

உட்­லண்ட்ஸ் சோத­னைச்­சா­வ­டி­களில் கூடு­தல் தானி­யங்கி குடி­நு­ழை­வுத் தடங்­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தால் பேருந்­துப் பய­ணி­கள் சோத­னைச்­சா­வ­டி­யைக் கடக்­கும் நேரம் குறைந்­துள்­ளது.

இந்த மாற்­றத்­தால் மணிக்கு கூடு­த­லாக 1,000 பேருந்­துப் பய­ணி­கள் சோத­னைச்­சா­வ­டி­களைக் கடக்­கின்­ற­னர்.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலைக்கு முன்பு 2019ல் இருந்த நிலை­யை­விட இது 20 விழுக்­காடு அதி­கம் என்று குடி­நுழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­யம் தெரி­வித்­தது.

கூடு­தல் தானி­யங்கி குடி­நுழை­வுத் தடங்­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தால் கூடு­தல் ஆத­ரவு தேவைப்­படும் மற்ற இடங்­களில் குடி­நு­ழைவு அதி­கா­ரி­க­ளைப் பணி­ய­மர்த்த முடி­வ­தாக ஆணை­யம் கூறி­யது.

தற்­போது உட்­லண்ட்ஸ் சோத­னைச்­சா­வ­டி­யில் குடி­நுழைவு அதி­கா­ரி­க­ளைக் கொண்ட ஏழு தடங்­களும் 68 தானி­யங்கித் தடங்­களும் உள்­ளன.

இந்த 68 தானி­யங்கித் தடங்­களில் 28 தடங்­கள் பய­ணி­களின் எண்­ணிக்­கைக்கு ஏற்ப மாற்றி அமைக்­கப்­ப­ட­லாம்.

நாள்­தோ­றும் ஏறத்­தாழ 242,000 பய­ணி­கள் உட்­லண்ட்ஸ் சோத­னைச்­சா­வ­டி­யைக் கடக்­கின்­ற­னர்.

அவர்­களில் 100,000 பேர் பேருந்­துப் பய­ணி­கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அடுத்த ஆண்டு கூடு­தல் தானி­யங்கி குடி­நு­ழை­வுத் தடங்­கள் படிப்­ப­டி­யாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் என்று ஆணை­யத்­தின் உட்­லண்ட்ஸ் சோத­னைச்­சா­வ­டிக்­குத் தலை­மை­தாங்­கும் மூத்த உதவி ஆணை­யர் கொலின் டான் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, பேருந்­துப் பய­ணி­கள் சோத­னைச்­சா­வ­டியை விரை­வா­கக் கடக்க வேறு சில நட­வ­டிக்­கை­களும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

பேருந்­து­க­ளுக்­கான குடி­நுழை­வுத் தடங்­க­ளுக்­குச் செல்­லா­மல் உட்­லண்ட்ஸ் சோத­னைச்­சா­வடி வளா­கத்­தில் பய­ணி­களை இறக்­கி­விட்டு பிறகு ஏற்­றிக்­கொள்ள 'லூப்' முறைப்­படி காஸ்வே லிங்க் பேருந்­து­களுக்கு அனு­மதி வழங்­கப்­

பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து புறப்

­பட்­டுச் செல்­லும் பொதுப் பேருந்து­க­ளுக்­கா­கவே குடி­நுழை­வுத் தடம் ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது.

தானி­யங்கி குடி­நு­ழை­வுத் தடங்­கள் முறை கடந்த ஜன­வரி மாதம் உட்­லண்ட்ஸ், துவாஸ் சோத­னைச்­சா­வ­டி­களுக்கு

விரி­வு­ப­டுத்­தப்­பட்­டது.