தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிராஞ்சியில் வெளிநாட்டு ஊழியர்களுக்குப் புதிய மருத்துவ நிலையம்

2 mins read

கரு­ணா­நிதி துர்கா

தர­மான, கட்­டுப்­ப­டி­யான மருத்­துவ வச­தி­களை வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு வழங்க 'சாட்டா கோம்­ஹெல்த்' புதிய மருத்­துவ நிலையம் ஒன்றைத் திறந்து வைத்­துள்­ளது.

கிராஞ்சி பொழு­து­போக்கு மையத்­தில் அமைந்­துள்ள இந்த மருத்­துவ வச­தி­களை வெளி­நாட்டு ஊழி­யர்­கள் எளிதில் நாட­லாம்.

முதன்மை பரா­ம­ரிப்புத் திட்­டத்­தின் ஓர் முக்­கிய அங்­க­மாக இந்த மருத்­துவ நிலையம் மனி­த­வள அமைச்­சால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த வசதி மருத்­துவச் செலவைக் குறைக்­க­வும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்குக் கிடைக்­கும் மருத்­து­வச் சேவை தரத்தை மேம்­ப­டுத்­த­வும் அர்த்­த­முள்ள முன்­னேற்­றங்­களை ஏற்­ப­டுத்­த­ உள்­ளது.

இதற்கு ஏற்­றாற்போல மருந்­து­கள் உட்­பட மருத்­துவ சேவைக்கு ஒவ்­வொ­ரு­வ­ரும் செலுத்த வேண்­டிய மருத்­துவக் கட்­ட­ணம் அதி­க­பட்­சம் $5 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

எளி­தாகப் பர­வக்­கூ­டிய நோய்­களைக் கட்­டுப்­ப­டுத்த தொற்­று­நோய்­க­ளுக்­கான தேசிய நிலை­யத்­தின் பரிந்­து­ரைப்­படி இவற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்குப் பதிவு, ஆலோ­ச­னைக்­கான பகு­ி­கள் தனி­யாக அமைக்­கப்­

பட்­டுள்­ளன.

புதிய நிலையத்தில் இவ்­வெளி­நாட்டு ஊழி­யர்­களுக்­காக மன­

ந­லம், உள­வி­யல் சார்ந்த சேவை­களும் வழங்­க­வி­ருக்­கின்­ற­னர்.

இந்­நி­கழ்ச்­சி­யின் சிறப்பு விருந்­தி­ன­ராக நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற மற்­றும் மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் டாக்­டர் கோ போ கூன் வருகை புரிந்­

தி­ருந்­தார்.

"ஆங்­கி­லத்­தில் சர­ள­மாகப் பேச முடி­யாத வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்­க­ளது தாய்­மொ­ழி­யில் இங்­குள்ள சுகா­தார பணி­யா­ளர்­களிடம் பேச­லாம்.

"இதன் மூலம் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளால் மருத்­து­வ­ரின் ஆலோ­சனை, சிகிச்சை முறை, மருந்­து­க­ளைப் பற்றி எளிதாகப் புரிந்­து­கொள்ள முடி­யும்," என்று டாக்­டர் கோ கூறி­னார்.