சம்பள உயர்வில் மெதுவான வளர்ச்சி

சம்பள உயர்வில் மெதுவான வளர்ச்சி

2 mins read

2022ல் 82% ஊழியரின் சம்பளம் உயர்ந்தது

சிங்­கப்­பூர் முத­லா­ளி­கள் ஒட்­டு­மொத்த சம்­ப­ளத்தை பத்­தாண்டு காணாத அள­வுக்கு கடந்த ஆண்டு உயர்த்­தி­னார்­கள். இருப்­பி­னும், அதிக பண­வீக்­கத்­தால் இயல்­பான சம்­பள உயர்வு அதற்கு முந்­திய ஆண்­டைக் காட்­டி­லும் குறை­வா­ன­தாக இருந்­தது.

பண­வீக்­கத்­தோடு கணக்­கிடப்­ப­டாத அடிப்­படை சம்­பள உயர்வு கடந்த ஆண்டு 6.5 விழுக்­காடு வளர்ந்­தது. 2021ஆம் ஆண்டு அந்த விகி­தம் 3.9 விழுக்­கா­டாக இருந்­தது.

மனி­த­வள அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்கை இத­னைத் தெரி­வித்­தது.

இருப்­பி­னும், அதிக பண­வீக்­கம் கார­ண­மாக இயல்­பான ஒட்டு­மொத்த சம்­பள உயர்வு 0.4 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது.

2021ஆம் ஆண்டு அந்த விகி­தம் 1.6 விழுக்­கா­டாக இருந்­தது. மேலும், கடந்த ஆண்­டின் இந்த உயர்வு விகி­தம் 2012க்குப் பிறகு ஆகக் குறை­வா­னது.

அடிப்­ப­டைப் பண­வீக்­கம் 2021ஆம் ஆண்டு 2.3 விழுக்­காடாக இருந்த நிலை­யில் கடந்த ஆண்டு 6.1 விழுக்­காட்­டுக்கு அது அதி­க­ரித்­தது.

அதே­போல, முத­லா­ளி­யின் மத்­திய சேம­நி­திப் பங்­க­ளிப்­பு­களை உட்­ப­டுத்­தாத இயல்­பான அடிப்­படை சம்­பள உயர்வு 1 விழுக்­காடு சரிந்­தது.

2012ஆம் ஆண்­டுக்­குப் பிறகு இந்த வீழ்ச்­சி பதி­வா­னது.

இந்­நி­லை­யில், ஒட்­டு­மொத்த அடிப்­ப­டைச் சம்­ப­ள­மும் இயல்­பான சம்­ப­ள­மும் இவ்­வாண்டு மித­மான வளர்ச்­சி­யைக் காணும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அமைச்­சின் அறிக்கை குறிப்­பிட்­டது.

மந்­த­நி­லையை உல­கப் பொரு­ளி­யல் எதிர்­நோக்­கு­வ­தா­லும் நிச்­ச­ய­மற்ற வர்த்­த­கச் சூழல் கார­ண­மா­க­வும் எச்­ச­ரிக்­கை­யு­ட­னான சம்­பள உயர்வு என்­னும் அணு­கு­மு­றை­யைப் நிறு­வ­னங்­கள் பின்­பற்­று­வது அதற்­குக் கார­ண­மாக இருக்­க­லாம் என்­றது அமைச்சு.

இங்­குள்ள ஊழி­யர்­களில் கிட்­டத்­தட்ட 82 விழுக்­காட்­டி­னர் கடந்த ஆண்டு சம்­பள உயர்வு பெற்­ற­னர். அதற்கு முந்­திய 2021ஆம் ஆண்­டில் 70 விழுக்­காட்­டுக்­கும் குறை­வா­ன­வர்­களுக்கே சம்­பள உயர்வு கிடைத்­தது.

அதா­வது, கடந்த ஆண்டு ஏறக்­கு­றைய நான்­கில் மூன்று ஊழி­யர்­களும் 2021ஆம் ஆண்டு 10ல் 6 ஊழி­யர்­களும் 2019ஆம் ஆண்டு 10ல் 7 ஊழி­யர்­களும் சம்­ப­ளம் உயர்வு பெற்­ற­னர்.

முத­லா­ளி­க­ளின் வரு­மான உயர்­வின் அடிப்­ப­டை­யில் இது அமைந்­தது. கிட்­டத்­தட்ட 10ல் 8 முத­லா­ளி­கள் இரண்­டா­வது ஆண்­டாக லாபம் ஈட்­டக்­கூ­டி­ய­வர்­க­ளாக மாறி­னர்.

அதே­நே­ரம், சம்­ப­ளக் குறைப்­பு­களும் சம்­ப­ளத்­தில் மாற்­ற­மில்லா நிலை­யும் கடந்த ஆண்டு காணப்­பட்­டது.

22.6 விழுக்­காட்­டி­ன­ரின் சம்­ப­ளம் மாற்­ற­மின்றி தொடர்ந்த வேளை­யில், மிகக் குறை­வாக 5.2 விழுக்­காட்­டி­ன­ரின் சம்­ப­ளம் மட்­டும் வெட்­டப்­பட்­டது. 2021ல் அந்த விகி­தம் 4.5 விழுக்­கா­டாக இருந்­தது. சரா­ச­ரி­யாக சம்­பள உயர்வு பெற்­ற­வர்­க­ளின் விகி­தம் 7.9 விழுக்­காடு வளர்ந்­தது. 2021ல் அந்த விகி­தம் 6.3 விழுக்­கா­டாக இருந்­தது.

ஒட்­டு­மொத்­த­மாக, சிங்­கப்­பூரிலுள்ள எல்­லாத் தொழில்­து­றை­களி­லும் 2021ஆம் ஆண்­டைக் காட்­டி­லும் கடந்த ஆண்டு சம்­பள உயர்வு அதி­க­மாக வளர்ச்சி கண்டது என்று அமைச்சு தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.

தங்­கு­மி­டம் மற்­றும் சில்­லறை விற்பனைத் துறை­களில் ஆக அதிக சம்­பள உயர்வு காணப்­பட்டதாக அது கூறியுள்ளது.