போக்குவரத்து நெரிசலுக்கு இந்த ஆண்டுக்குள் தீர்வு: ஜோகூர் முதல்வர் உறுதி

போக்குவரத்து நெரிசலுக்கு இந்த ஆண்டுக்குள் தீர்வு: ஜோகூர் முதல்வர் உறுதி

2 mins read

சிங்­கப்­பூ­ருக்­கும் ஜோகூ­ருக்­கும் இடை­யி­லான இரண்டு பாலங்­க­ளி­லும் ஏற்­படும் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லுக்கு இந்த ஆண்­டுக்­குள் தீர்வு காணப்­ப­ட­வேண்டி உள்­ள­தாக ஜோகூர் முதல்­வர் ஓன் ஹஃபிஸ் காஸி தெரி­வித்து உள்­ளார். போக்­கு­வ­ரத்­துப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண்­ப­தற்­கான முயற்­சி­கள் இடை­ய­றாது நடை­பெற்று வரு­வ­தா­க­வும் அவர் கடந்த சனிக்­கி­ழமை உற்­பத்தி ஆலை ஒன்­றின் திறப்பு விழா­வில் கூறி­னார்.

"இரு நாடு­க­ளின் எல்­லை­யில் ஏற்­ப­டக்­கூ­டிய நெரி­சல் மிக­வும் முக்­கி­ய­மான பிரச்­சினை. இரு­பது, முப்­பது ஆண்­டு­க­ளாக இப்­பி­ரச்­சினை தொன்­று­தொட்டு வரு­கிறது. புதிய முதல்­வர் என்ற முறை­யில் இந்த ஆண்­டுக்­குள் இப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­படும் என்­பதே எனது நோக்­க­மாக உள்­ளது. அத­னால்­தான் விடி­யற்­காலை 5 மணிக்­குக்­கூட சுல்­தான் அபு பக்­கார் மற்­றும் சுல்­தான் இஸ்­கந்­தார் குடி­நு­ழைவு வளா­கங்­களில் மக்­கள் அடிக்­கடி என்­னைக் காண­மு­டி­கிறது," என்று அவர் தெரி­வித்­தார்.

ஜோகூர் மாநில முதல்­வ­ராக திரு ஓன் ஹஃபிஸ் கடந்த மார்ச் மாதம் பதவி ஏற்­றார். அண்­மை­யில் அவர் ஜோகூர் குடி­நு­ழைவு சோத­னைச் சாவ­டிக் கட்­ட­டங்­களில் சோதனை நடத்­தி­னார். அப்­போது சில கடப்­பி­தழ் அனு­மதிக் கூடங்­களில் பணி­யா­ளர்­கள் இல்­லா­த­தைக் கண்டு அது­குறித்து அதி­கா­ரி­க­ளி­டம் அவர் வின­வி­னார்.

அதன் பின்­னர், உச்­ச­நே­ரங்­களில் கூட்­டத்­தைச் சமா­ளிக்­கும் பொருட்டு குடி­நு­ழைவுப் பணி­யா­ளர்­க­ளின் வேலை­நே­ரங்­களில் மாற்­றம் செய்­யப்­பட்­டது. அத்­து­டன், ஜோகூ­ரின் பல வட்­டா­ரங்­களில் சாலை­களை மேம்­ப­டுத்­து­வ­தி­லும் திரு ஓன் ஹஃபிஸ் கவ­னம் செலுத்தி வருகிறார்.

அந்த வகை­யில் சிங்­கப்­பூர் பாலங்­களில் போக்­கு­வ­ரத்து நெரி சலைக் குறைப்­ப­தி­லும் அவ­ரது கவ­னம் திரும்­பி­யி­ருக்­கிறது.