தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'ஹெல்தியர் எஸ்ஜி' சுகாதாரத் திட்டத்தில் 24,000 பேர் பதிவு

1 mins read
84866357-f938-40ba-8206-ce393cbe6db0
-

'ஹெல்­தி­யர் எஸ்ஜி' என்­னும் சிங்­கப்­பூ­ரின் முன்­னெச்­ச­ரிக்­கைப் பரா­ம­ரிப்பு உத்­தி­யின் கீழான திட்­டத்­தில் 24,000க்கும் மேற்­பட்­டோர் தங்­க­ளது குடும்ப மருத்­து­வ­ரு­டன் பதிவு செய்­துள்­ள­னர்.

இவர்­கள், நீரி­ழிவு, உயர் ரத்த அழுத்­தம் போன்ற நாட்­பட்ட நோய்­களை உடைய 40 வய­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று தெரி­வித்­தார்.

"இந்த எண்­ணிக்கை எதிர்­பார்த்­த­தைக் காட்­டி­லும் அதி­கம். அக்­க­றை­யு­டன் வலி­யு­றுத்­தப்­பட்­ட­தைத் தொடர்ந்து நோயா­ளி­கள் பதி­வு­செய்ய முன்­வந்­த­தாக பொது மருத்­து­வர்­கள் கூறி­னர்.

"முன்­னெச்­ச­ரிக்­கைப் பரா­மரிப்பு மற்­றும் நோய்­களை நிர்­வ­கிப்­பது தொடர்­பான தக­வல் நல்­ல­மு­றை­யில் தொடக்­கத்­தி­லேயே எதி­ரொ­லித்து உள்­ள­தாக நான் கரு­து­கிறேன்," என்­றார் அமைச்­சர்.

ஹெல்­தி­யர் எஸ்ஜி நட­வ­டிக்­கை­யில் கடந்த மார்ச் மாதம் சிங்­கப்­பூ­ரில் உள்ள சமூக சுகா­தார உத­வித் திட்ட மருந்­த­கங்­கள் சேரத் தொடங்­கின.

தற்­போது வரை, அத்­த­கைய 1,200 மருந்­த­கங்­களில் மூன்­றில் இரண்டு, அதா­வது 870 மருந்­த­கங்­கள் இதில் சேர்ந்­துள்­ளன.

அர­சாங்­கத்­தின் இந்த முயற்­சிக்கு குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­கும் அவர்­க­ளின் குடும்ப மருத்­து­வர்­களுக்­கும் இடைப்­பட்ட அர்ப்­பணிப்பு மிக்க, நம்­பிக்­கை­யான உறவு முக்­கி­யம் என்­றார் திரு ஓங். அதுவே சிறந்த சுகா­தா­ரத்தை உரு­வாக்­கு­வ­தன் ஆரம்­பப்­புள்ளி என்­றும் அவர் தெரி­வித்­தார்.

நொவினா ஸ்கு­வே­ரில் ஃபுல்லர்ட்­டன் சுகா­தா­ரக் குழு­மத்­தின் சுகா­தா­ரப் பரி­சோ­தனை நிலை­யத் திறப்பு நிகழ்­வில் பங்­கேற்று திரு ஓங் பேசி­னார்.

ஹெல்­தி­யர் எஸ்ஜி நட­வ­டிக்கை யின் சம்­பி­ர­தா­யத் தொடக்­கத்தை ஜூலை 5ல் நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் நடை­பெ­று­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.