தொடர் கனமழை காரணமாக கிள்ளானில் வெள்ள பாதிப்பு

மலே­சி­யா­வின் சிலாங்­கூர் மாநிலம், கிள்­ளான் மாவட்­டத்­தில் உள்ள பண்­டார் புக்­கிட் ராஜா­வில் பெய்த கன­மழை கார­ண­மாக அங்கு பல இடங்­களில் வெள்­ளம் ஏற்­பட்­டது.

“ஞாயிறு காலை இரண்டு மணி நேரத்­துக்­கும் மேலாக பெய்த கன­மழை கார­ண­மாக ஜாலான் மாக்­யோங் பகுதி மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டு உள்ளது,” என்று பண்­டார் புக்­கிட் ராஜா குடி­யி­ருப்­பா­ளர் சங்­கத்­தின் தலைவர் முகம்­மது ஸுல்­கி­ஃப்லி ஒத்மான் கூறி­னார்.

கன­ம­ழை­யால் பண்­டார் புக்­கிட் ராஜா­வில் உள்ள நீர்ப்­பி­டிப்­புக் குளங்­கள் நிரம்பி வழிந்­த­தாக அவர் சொன்­னார்.

பிர­தான சாலை­யும் பல்­வேறு வீடு­களும் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டன. வெள்­ள­நீர் 0.3 மீட்­டர் வரை உயர்ந்­தது.

ஷா ஆல­மில் உள்ள ஓட்­டு­நர் பயிற்­சிக் கழ­கத்­தைச் சேர்ந்த ஊழி­யர்­கள் எழு­வர், திடீர் வெள்ளம் ஏற்­பட்­ட­தன் கார­ண­மாக அரை மணி­நே­ரம் சாலை­யில் சிக்­கித் தவித்­த­னர். பின்­னர் அவர்­கள் மீட்­கப்­பட்­ட­னர்.

ஜாலான் மேரு, கிள்­ளான் சென்ட்­ரல் அருகே ஏற்­பட்ட வெள்­ளத்­தால் 57 வயது மாது ஒரு­வர் அவ­ரது வாக­னத்­தில் சிக்­கிக்­கொண்­டார்.

வெள்­ள­நீர் சூழ்ந்த சாலை­யில் சென்­ற­போது அந்த வாக­னம் சிக்கிக்­கொண்­ட­தாக சிலாங்­கூர் தீய­ணைப்பு, மீட்­புத்­துறை உதவி இயக்­கு­நர் (செயல்­பாடு) முகம்­மது இஹ்­சான் முகம்­மது ஸயின் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!