தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கிழக்கு ஆசியாவில் ஏராள வாய்ப்புகள்: வோங்

2 mins read
70e2be4d-6427-45da-932a-ea0c592ea70e
செந்­தோ­சா­வில் நேற்று தொடங்கி வெள்­ளிக்­கி­ழமை வரை நடை­பெ­றும் 'ஏஷியா டெக் எக்ஸ் சிங்­கப்­பூர் 2023' மாநாட்­டின் முதல் நாளான நேற்று துணைப் பிரதமர் வோங் பங்­கேற்­றுப் பேசி­னார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

2030ல் மின்னிலக்கப் பொருளியல் ஐந்து மடங்கு வளர்ச்சி காணும்

உல­கில், குறிப்­பாக தென்­கி­ழக்கு ஆசி­யா­வில் மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் வாய்ப்­பு­கள் நம்மை பெரு­ம­ள­வில் எதிர்­நோக்­கி­யுள்­ளன என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார்.

2030ஆம் ஆண்­டு­வாக்­கில் தென்­கி­ழக்கு ஆசி­யா­வின் மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் ஒரு டிரில்­லி­யன் டாலர் அள­வுக்கு ஐந்து மடங்கு வளர்ச்சி அடை­யும் என எதிர் பார்க்­கப்­ப­டு­கிறது. இவ்­வட்­டா­ரத்­தில் புதிய இணை­யப் பய­னா­ளர்­களும் நடுத்­தர வகுப்பு மக்­களும் அதி­க­ரிப்­ப­தால் இது சாத்­தி­ய­மா­கும் என்­றார் அவர்.

செந்­தோ­சா­வில் நேற்று தொடங்கி வெள்­ளிக்­கி­ழமை வரை நடை­பெ­றும் 'ஏஷியா டெக் எக்ஸ் சிங்­கப்­பூர் 2023' மாநாட்­டின் முதல் நாளான நேற்று துணைப் பிரதமர் வோங் பங்­கேற்­றுப் பேசி­னார்.

மின்­னி­லக்­கப் பொரு­ளி­ய­லுக்கு மிகப்­பெ­ரிய எதிர்­கா­லம் இருப்­பதை அவர் சுட்டிக்காட்­டி­னார்.

இணை­யப் பாது­காப்பு, இணை­யத் தொடர்பு, செயற்கை நுண்­ண­றிவு பயன்­பாடு ஆகி­யவை கவ­னிக்­கப்­பட வேண்­டிய முக்­கிய மூன்று முன்­னு­ரி­மை­கள் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

தக­வல் தொடர்­புத் துறை (ஐசிடி), இதர துறை­களில் இடம்­பெ­றும் மின்­னி­லக்­க­ம­ய­மாக்­கல் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய மின்­னி­லக்­கப் பொரு­ளி­ய­லின் வளர்ச்சி, 2022ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ரின் ஒட்­டு­மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் 17% பங்கை வகிக்­கிறது என்று தக­வல் தொடர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யத்­தின் புள்ளி விவ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

மென்­பொ­ருள் உரு­வாக்­கம், இணை­யச் சேவை ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய ஐசிடி துறை மட்­டும் 2022ஆம் ஆண்­டில் 8.6 விழுக்­காடு வளர்ச்சி கண்­டது. இது, ஒட்டு மொத்த பொரு­ளி­ய­லில் 3.6 விழுக்­காடு என்று ஆணை­யம் குறிப்­பிட்­டது.

ஆனால் பல சவால்­கள் இருப்­ப­தாக நிதி­ய­மைச்­ச­ரு­மான திரு வோங் மாநாட்­டில் தெரி­வித்­தார்.

நாட்­டுக்கு நாடு வேறு­ப­டும் தர­வு­க­ளைக் கையா­ளும் விதி­மு­றை­கள், வேலை வாய்ப்பு உத்­த­ர­வா­தம், செயற்கை நுண்­ண­றி­வுப் பயன்­பாட்­டு நெறி­மு­றை­கள் போன்ற வற்றை அவர் உதா­ர­ண­மாக பட்­டி­ய­லிட்­டார்.

"இந்­தப் பிரச்­சி­னை­களை எல்­லாம் எவ்­வாறு நிர்­வ­கிக்­கப் போகி­றோம் என்­ப­தில்­தான் இன்­றைய மின்­னி­லக்­கப் பொரு­ளி­ய­லில் எதிர்­கா­லம் அடங்­கி­யி­ருக்­கிறது. ஒரு நாடு மட்­டுமே பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காண முடி­யாது. ஒன்­று­பட்டு செயல்­பட்­டால்­தான் ஒருங்­கி­ணைந்த அனு­ப­வ­மும் அறி­வும் வெற்­றிக்கு வழி­வ­குக்­கும்.

"சிங்­கப்­பூர், ஒன்­றோடு ஒன்று நன்கு இணைக்­கப்­பட்ட, அனைத்­தை­யும் உள்ள டக்­கிய, நம்­ப­க­மான மின்­னி­லக்­கப் பொருளி யலுக்கு பாடு­பட வேண்­டும்," என்று துணைப் பிர­த­மர் மேலும் கூறி­னார்.

உல­க­ளா­விய தொழில்­நுட்­பப் பிரச்­சி­னை­களை அலசி ஆராய உலக நாடு­க­ளைச் சேர்ந்த தொழில்­நுட்ப நிபு­ணர்­கள் மாநாட்­டில் பங்­கேற்­கின்­ற­னர். எஸ்­தோ­னிய பிர­த­மர் காஜா கல்­லாஸ், நியூ­சி­லாந்­தின் முன்­னாள் பிர­த­மர் ஜெசிந்தா ஆர்­டர்ன் ஆகி­யோ­ரும் மாநாட்­டில் உரை நிகழ்த்­தி­னர்.