தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் முழுவதும் 'ரோபோ' காவல்

2 mins read
21683d87-c3de-41eb-95b0-53602641ae0e
-

சிங்­கப்­பூர் முழு­வ­தும் இயந்­திர மனி­தர்­களை அனுப்ப காவல் துறை அதற்­கான நட­வ­டிக்­கை­களை தீவி­ர­மாக்­கி­யுள்­ளது.

இரண்டு ஆண்­டு­க­ளுக்கு மேலாக நடத்­தப்­பட்ட பல்­வேறு சோத­னை­க­ளுக்­குப் பிறகு இயந்­திர மனி­தர்­களை சுற்­றுக் காவ­லில் ஈடு­ப­டுத்த முடி­யும் என்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது.

இந்த 'ரோபோக்­கள்' 1.7 மீட்­டர் உய­ரம் கொண்­டவை. ஏதா­வது சம்­ப­வம் நடந்­தால் அங்கு காவல் படை­யி­னர் வரு­வ­தற்கு முன்பு தடுப்­பு­களை ஏற்­ப­டுத்­த­வும் பொது­மக்­களை எச்­ச­ரிக்­க­வும் இயந்­திர மனி­தர்­கள் பயன்­ப­டுத்­தப்­படும்.

படக்­க­ரு­வி­கள், உணர்­வுக் கரு­வி­கள், ஒலி­பெ­ருக்கி, கணி­னித் திரை, ஒளி­ரும் விளக்­கு­கள், எச்­ச­ரிக்கை ஒலி எழுப்­பும் சாத­னங்­கள் போன்ற வச­தி­க­ளு­டன் ரோபோக்­கள் தன்­னந்­த­னி­யாக சுற்­றுக்­கா­வ­லில் ஈடு­பட முடி­யும். அதன் வழி­யாக காவல்­து­றை­யும் பொது­மக்­க­ளு­டன் நேர­டி­யாக உரை­யாட முடி­யும்.

ஏற்­கெ­னவே இரண்டு ரோபோக்­கள் சுற்­றுக் காவ­லில் ஈடு­பட்டு வரு­வ­தாக நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் சிங்­கப்­பூர் காவல் படை தெரி­வித்­தது.

ஏப்­ரல் மாதத்­தி­லி­ருந்து சாங்கி விமான நிலை­யம் முனை­யம் 4ல் அவை இரண்­டும் கூடு­தல் கண்­க­ளாக செயல்­பட்டு வரு­கின்­றன என்­றது அறிக்கை.

2018 பிப்­ர­வ­ரி­யில் சிங்கே அணி­வ­குப்­பின்­போது சோத­னை­க­ளின் ஒரு கட்­ட­மாக காவல்­துறை ரோபோக்­கள் முதன்­மு­றை­யாக அறி­மு­கம் செய்­யப்­பட்­டன.

அதன் பிறகு பல­முறை பெயர் மாற்­றங்­க­ளைக் கண்டு உரு­மாறி, செயல்­மாறி இன்­றைய காவல்­துறை ரோபோ­வாக அவை உரு­வா­கி­யி­ருக்­கின்­றன.

ஆரம்­பத்­தில் பல்­நோக்கு அனைத்து நிலப்­ப­ரப்பு தானி­யக்க ரோபோ என்ற பெயரை அவை கொண்­டி­ருந்­தன.

ஒவ்­வொரு முறை­யும் ரோபோக்­களில் புதிய அம்­சங்­கள் சேர்க்­கப்­ப­டும்­போது பண்­டி­கைக் காலத்­தில் மரினா பே, சிங்­கப்­பூ­ரில் கொள்­ளை­நோய் பர­விய ஆரம்­ப­கா­லத்­தில் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­கள் உள்­ளிட்ட இடங்­களில் சோதிக்­கப்­பட்­டன. அவற்­றில் பொருத்­தப்­பட்­டுள்ள படக்­க­ருவி 2.3 மீட்­டர் வரை உயரே எழும்பி படம் பிடிக்­கக்­கூ­டி­யவை.

இந்­தப் படக்­க­ரு­வி­யும் மற்ற படக்­க­ரு­வி­களும் சேர்ந்து 360 டிகி­ரி­யில் படம் பிடிக்க முடி­யும்.

நேற்று முனை­யம் 4ல் நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் காவல் ரோபோக்­க­ளின் சுற்­றுக்­கா­வல் செயல்­பா­டு­கள் பற்றி விளக்­கப்­பட்­டது.