தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காவல்துறையினரை குடியிருப்பாளர்கள் சந்தித்துப் பேச புதிய திட்டம் தொடக்கம்

2 mins read
fc8f3de8-7abb-4120-85b0-249567e9318f
-

தங்­கள் அக்­கம்­பக்­கத்­தில் காவல்­துறை அதி­கா­ரி­களை அவ்­வப்­போது குடி­யி­ருப்­பா­ளர்­கள் சந்­திக்க புதிய திட்­டம் ஒன்று வகை­செய்­யும்.

ஜூன் முதல், தீவு முழு­வதும் உள்ள 35 அக்­கம்­பக்க காவல் நிலை­யங்­கள் பொது­மக்­களை ஈடு­ப­டுத்­தும் முயற்­சி­யைத் தீவி­ரப்­ப­டுத்­து­கின்­றன.

அந்­தந்த அக்­கம்­பக்­கப் பேட்டை­களில் உள்ள உணவு, பானக் கடை­களில் 'காப்பி வித் ஏ காப்' நிகழ்­வு­க­ளுக்கு அவை ஏற்­பாடு செய்­யும். ஒவ்­வோர் அமர்­வும் இரண்டு மணி நேரம் நீடிக்­கும்.

தத்­தம் சமூக காவல் பிரிவைச் சேர்ந்த நான்கு அதி­கா­ரி­க­ளு­டன் வரை குடி­யி­ருப்­பாளர்­கள் அள­வ­ளாவ முடி­யும். காப்பி அல்­லது தேநீர் அருந்­திக்­கொண்டு எந்தத் தலைப்பு குறித்து வேண்­டு­மா­னா­லும் அவர்­கள் பேச­லாம். குடி­யி­ருப்­பா­ளர்­கள் அருந்­திய பானத்­துக்­கான கட்­ட­ணத்தை சிங்­கப்­பூர் காவல்­துறை ஏற்­கும்.

ஒன் பொங்­கோ­லில் காவல்­துறை சமூக சாலைக்­காட்­சி­யில் மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன் இத்­திட்­டத்தை நேற்று தொடங்­கி­வைத்­தார்.

காவல்­து­றைக்­கும் சமூ­கத்­துக்­கும் இடை­யே­யான நம்­பிக்­கை­யின் அடிப்­ப­டை­யில்­தான் உல­கி­லேயே ஆகப் பாது­காப்­பான நாடு­களில் ஒன்­றாக சிங்கப்­பூர் விளங்­கு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

"காவல்­து­றைக்­கும் சமூ­கத்­துக்­கும் இடை­யில் வலு­வான உற­வைக் கட்­டிக்­காப்­ப­தற்கு தொடர் முயற்சி தேவை," என்­றார் அவர்.

'காப்பி வித் ஏ காப்' நிகழ்­வில் பொது­மக்­கள் அனை­வ­ரும் பங்­கேற்­க­லாம். இதில் குறிப்­பிட்ட நிகழ்ச்சி நிரல் என எது­வும் கிடை­யாது.

"வச­தி­யான ஒரு சூழ­லில் பொது­மக்­கள் எங்­களை எளி­தில் அணுக தளம் ஏற்­ப­டுத்­தித் தர நாங்­கள் விரும்­பி­னோம்.

"அவர்­களுக்­கும் எங்­க­ளுக்கும் இடையே கலந்­து­ரை­யா­டல்­களை இடம்­பெ­றச் செய்­வதும் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­து­வதும் இத்­திட்­டத்­தின் இலக்கு," என்று காவல்­து­றை­யின் சமூ­கப் பங்­கா­ளித்­து­வத் துறை இயக்­கு­நரான காவல்­துறை உதவி ஆணையர் ஷங் யுன் சின் தெரி­வித்­தார்.

எடுத்­துக்­காட்­டாக, உள்­ளூ­ரில் குற்ற நில­வ­ரம் குறித்து குடி­யிருப்­பா­ளர்­க­ளுக்கு அதி­கா­ரி­கள் தக­வல் கூற­லாம்.

தங்­கள் குடி­யிருப்புப் பகுதி குறித்த சந்­தே­கங்­க­ளைக் குடி­யிருப்­பா­ளர்­கள் கேட்டுத் தெளிவு­படுத்­திக்­கொள்­ள­லாம்.