தாயகம் திரும்பும் பாண்டா கரடி; காத்திருக்கும் மில்லியன்கணக்கான மக்கள்

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் இருந்து தனது சொந்த நாடான சீனாவுக்குத் திரும்பியுள்ளது பாண்டா கரடி யா யா.

மெம்பிஸ் விலங்கியல் தோட்டத்தில் இருந்த 22 வயது யா யா கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 8) சீனாவிற்குக் கொண்டு செல்லப்பட்டது. 

கடந்த பிப்ரவரி மாதம் யா யாவின் துணையான ஆண் பாண்டா கரடி லே லே மாண்டுபோனது. 

அதனைத் தொடர்ந்து கரடிகள் எப்படிப் பராமரிக்கப்படுகின்றன என்று கேள்விகள் எழுந்தன. சீன நாட்டினர் பலரும் அமெரிக்காவைக் குறைகூறினர். 

கரடிகள் நல்ல முறையில் கவனிக்கப்படுவதாக அமெரிக்காவும் அதற்கு பதில் தெரிவித்தது.

யா யா கரடி அமெரிக்காவில் இருந்து புறப்படும் காணொளி இணையம்வழி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

அதனை மில்லியன்கணக்கான மக்கள் பார்வையிட்டு தங்களது கருத்துகளைப் பதிவிட்டனர். 

யா யா கரடி 2003ஆம் ஆண்டு அமெரிக்காவின் டென்னிஸி நகருக்கு ஒப்பந்த அடிப்படையில் சீனாவில் இருந்து கொண்டுசெல்லப்பட்டது. 

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!