வடமேற்கு சீனாவில் நிலநடுக்கம்: இன்னும் 12 பேரைக் காணவில்லை

பெய்ஜிங்: வடமேற்கு சீனாவின் கான்சு மாநிலத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 18) 6.2 ரிக்டர் நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து வியாழக்கிழமை இன்னும் 12 பேரைக் காணவில்லை.

ஆனால், மீட்பு நடவடிக்கை இவ்வளவு விரைவில் முடிந்திருப்பது குறித்து இணையவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கான்சு-கிங்ஹாய் மாநில எல்லை அருகே உள்ள மலைப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 15 மணி நேரத்தில், அதாவது செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தேடுதல், மீட்புப் பணி நிறைவு பெற்றுவிட்டதாக சீன ஊடகங்கள் தெரிவித்தன.

ஆனால், கிங்ஹாயில் தேடுதல் பணி தொடர்ந்ததா என்பது குறித்து தெரியவில்லை.

புதன்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, கான்சுவில் 115 பேர் உயிரிழந்ததாகவும் 784 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதன்கிழமை இரவு 8.56 மணி நிலவரப்படி, கிங்ஹாயில் மரண எண்ணிக்கை 22ஆக உயர்ந்தது; 198 பேர் காயமுற்றனர்; 12 பேரைக் காணவில்லை.

நிலநடுக்கத்தால் 207,000க்கும் அதிகமான வீடுகள் சேதமுற்றன. கான்சுவில் மட்டும் கிட்டத்தட்ட 15,000 வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் 145,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!