தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோத்தா டமான்சாராவில் திடீர் வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு

1 mins read
5a1de9ce-2bfa-488c-bfc8-9670eb22e060
ஐந்து வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டதாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத்துறைக்குக் காலை 8.09 மணி அளவில் தகவல் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: மலேசிய ஊடகம்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கோத்தா டமான்சாராவிலும் பெட்டாலிங் ஜெயாவிலும் நவம்பர் 12ஆம் தேதி காலை திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

இதன் காரணமாக அப்பகுதிகளில் போக்குவரத்து கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

ஐந்து வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டதாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத்துறைக்குக் காலை 8.09 மணி அளவில் தகவல் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

திடீர் வெள்ளம் ஏற்பட்ட இரு இடங்களிலும் வெள்ளநீர் வடிந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்