பாரிஸ்: ஏற்கெனவே ஐரோப்பாவை வாட்டிவரும் வெப்ப அலை மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வார இறுதியில் பிரான்சில் அனல் காற்றால் சிலர் உயிரிழக்க நேரிட்டது. மனிதர்களின் நடவடிக்கைகளால் வரலாறு காணாத அளவில் அனல் காற்று வீசுவதாக ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர்.
தீர்வுகாணும் நடவடிக்கை
இந்நிலையில், பாதிக்கப்பட்ட நாடுகள் பிரச்சினையை எதிர்கொள்ள நடவடிக்கை எடுத்துவருகின்றன. பிரான்சில் 845 பள்ளிகள் மூடப்படும் என்று அதிகாரிகள் திங்கட்கிழமை (ஜூன் 22) அறிவித்தனர். மேலும் 1,800 பள்ளிகளில் வழக்கமான நேரத்துக்கு முன்னரே பள்ளி நடவடிக்கைகள் முடிவுறும்.
பிரான்சின் சில இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசைத் தாண்டியது. ஜூன் மாதம் பொதுவாக வெப்பநிலை இவ்வளவு அதிகமாகப் பதிவாகாது.
பிரான்ஸ், பெல்ஜியம் இருநாடுகளிலும் சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரான்சைப் பொறுத்தவரை பொதுவாகத் தலைநகர் பாரிஸ், அதன் சுற்று வட்டாரங்களில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
பெல்ஜியத்தில் வரலாறு காணாத அளவு வெப்பநிலை பதிவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின், பிரிட்டன்
ஸ்பெயினில், தற்போது நடந்துவரும் உலகக் கிண்ணப் காற்பந்துப் போட்டியில் அந்நாடு சவூதி அரேபியாவுடன் மோதிய ஆட்டம் பொது இடத்தில் திரையிடப்படவிருந்தது.
ஆனால் கடும் வெப்பம் காரணமாக அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல், பிரிட்டனிலும் வரலாறு காணாத அளவில் வெப்பநிலை அதிகமாகப் பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

