மூன்று மாதங்களில் நான்காம் முறையாகக் குமுறிய எரிமலை

ரெய்க்யவிக்: ஐஸ்லாந்து நாட்டிலுள்ள எரிமலை ஒன்று, கடந்த டிசம்பரிலிருந்து நான்காவது முறையாக சனிக்கிழமை (மார்ச் 16) இரவு குமுறியது.

இரவு நேரத்தில் பேரளவில் புகையையும் தீக்குழம்பையும் உமிழ்ந்ததால் வானம் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளித்தது.

சிங்கப்பூர் நேரப்படி ஞாயிறு அதிகாலை 4.23 மணிக்கு எரிமலை குமுறத் தொடங்கியது. இதனால் வெளிப்பட்ட எரிமலைக் குழம்பு ஓடி, நிலத்தில் கிட்டத்தட்ட 2.9 கிலோமீட்டர் நீளத்திற்கு வெடிப்புப் பிளவுகள் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எரிமலைக் குழம்பு தெற்கு நோக்கி, அருகிலுள்ள கிரிண்டவிக் எனும் மீன்பிடி நகரத்தை நோக்கிப் பாய்ந்தது. அந்நகரில் ஏறத்தாழ 4,000 பேர் வசிக்கின்றனர். இதற்குமுன் பிப்ரவரியில் ஏற்பட்ட எரிமலைக் குமுறலால் அவர்கள் அனைவரும் அந்நகரைவிட்டு வெளியேறிய நிலையில், வெகுசிலர் மட்டுமே அங்குத் திரும்பி இருந்ததாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.

இந்நிலையில், அந்நகரவாசிகள் அனைவரும் அங்கிருந்து மீண்டும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த ஜனவரியில் நிகழ்ந்த எரிமலைக் குமுறலால் அங்குப் பல வீடுகள் மண்ணோடு மண்ணாகிப் போயின.

இதற்கிடையே, அப்பகுதியில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக ஐஸ்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.

ஐஸ்லாந்தில் 30க்கும் அதிகமான எரிமலைகள் கனன்றுகொண்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஊரைவிட்டு வெளியேற்றப்பட்ட கிரிண்டவிக் நகரவாசிகள், தொலைவில் இருந்தபடி எரிமலைக் குமுறலைப் பார்க்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!