தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொல்லை தரும் சீனத் தொலைபேசி அழைப்புகள் வருத்தமளிக்கின்றன: ஜப்பான்

1 mins read
48f0de17-220b-4cbe-92b5-36e88b2c8e1a
“ஜப்பானில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து மீன் பொருள்களின் விற்பனையையும் தடை செய்க” என்ற வாசகத்துடன்கூடிய இந்த அறிவிப்புப் பலகை பெய்ஜிங்கில் ஜப்பானிய உணவகங்கள் அமைந்திருக்கும் வட்டாரத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதி காணப்பட்டது. - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பானில் உள்ள ஃபுக்குஷிமா அணுசக்தி ஆலையின் கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் திறந்துவிடுவது குறித்து சீனாவில் இருந்து தொல்லைதரும் தொலைபேசி அழைப்புகள் வருவது வருத்தத்திற்கு உரியது என்று ஜப்பான் கூறியுள்ளது.

“அதிக எண்ணிக்கையில் தொல்லைதரும் தொலைபேசி அழைப்புகள் சீனாவிலிருந்தே விடுக்கப்படுவதாக நம்பப்படுகிறது. இது மிகவும் வருத்தத்திற்கு உரியது. இதுகுறித்து நாங்கள் கவலை அடைந்துள்ளோம்,” என்று ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்நிலை பேச்சாளர் ஹிரோகாஸு மட்சுனோ செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

ஜப்பானில் 2011ஆம் ஆண்டு அடுத்தடுத்து நேர்ந்த சுனாமியாலும் வலுவான நிலநடுக்கத்தாலும் ஃபுக்குஷிமா அணுசக்தி ஆலை பாதிக்கப்பட்டது. அதிலிருந்த கழிவுநீரை ஜப்பான் வியாழக்கிழமை முதல் திறந்துவிடத் தொடங்கியது.

திரு மட்சுனோவின் கருத்து குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கேட்டதற்கு சீன வெளியுறவு அமைச்சு பதிலளிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்