பிந்தானுக்குச் சென்ற படகு மூழ்கி 11 பேர் பலி

இந்தோனீசியாவின் சுமத்ரா தீவுக்கு கிழக்கே படகு ஒன்று கடலில் மூழ்கியதில் குறைந்தபட்சம் 11 பேர் மாண்டுவிட்டனர். 

  ஒருவரைக் காணவில்லை என்று அந்த நாட்டின் தேசிய தேடி மீட்பு அமைப்பு ‘பசார்னாஸ்’ நேற்று தெரிவித்தது. 

மீட்புப் பணியாளர்கள் 62 பேரை உயிரோடு மீட்டனர். அந்தச் சம்பவத்தில் மாண்டவர்களில் பெரும்பாலானவர்கள் மாதர்களும் சிறார்களும் ஆவர். 

மேற்கு ரியாவ் மாநிலத்தின் கடலோரப் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் நேரத்தில் படகு மூழ்கிவிட்டது என்று பசார்னாஸ் அமைப்பின் பேச்சாளரான குக்கூ விடோடோ கூறினார். 

அந்தப் படகில் 74 பேர் இருந்தனர். 62 பேர் உயிர்பிழைத்துவிட்டனர். 11 பேர் மாண்டுவிட்டனர். ஒருவரைக் காணவில்லை. அவர் இன்னமும் தேடப்பட்டு வருகிறார் என அந்தப் பேச்சாளர் கூறினார்.  

அந்த வேகப் படகு பிந்தான் தீவில் இருக்கும் தஞ்சோங் பினாங்கு நகருக்குச் சென்று கொண்டிருந்தது. 

வழியில் தெம்பிலகான் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் படகு விபத்துக்குள்ளாகிவிட்டது. 

கரையில் இருந்து 198 கி.மீ. தொலைவில் விபத்து நிகழ்ந்தது. 

விபத்துக்கான காரணங்கள் இன்னமும் தெரியவில்லை என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார். புலன்விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறினார். 

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!