கோலாலம்பூர்: இந்தியாவால் தேடப்பட்டுவரும் குற்றவாளிகள் என்று நம்பப்படும் இருவரை மலேசியா நாடுகடத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பட்டியாலா நகரில் ரயில் தண்டவாள வெடிப்பில் அவ்விருவருக்கும் தொடர்பிருப்பதாக நம்பப்படுகிறது. மலேசியக் காவல்துறை அவர்களை இந்தியாவுக்கு அனுப்பிவைத்துள்ளது.
இருவரையும் அடையாளம் கண்டு தடுத்து வைக்குமாறு இந்திய அதிகாரிகள் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து அவர்களை நாடுகடத்தியதாக புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைப் பிரிவு இயக்குநர் எம். குமார் தெரிவித்தார்.

