விமானத்தில் துர்நாற்றம், பயணிகள் வெளியேற்றம்!

காணொளி இணைப்பு!

ஒலேண்டோ: விமானத்தில் கடும் நாற்றம் அடித்ததால் பயணிகள் வெளியேற்றப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்தது.

கடந்த புதன்கிழமை (மார்ச் 27) மாலை சார்லட் டக்ளஸ் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து ஒலேண்டோ நோக்கி ஃபிரன்டியர் ஏர்லைன்ஸ் புறப்படவிருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

அவ்விமானத்தில் இருந்த 226 பயணிகள் விமான இணைப்புப் பாலம் வழியாகவும் வெளியேற்றச் சறுக்கு வழியாகவும் வெளியேறினர்.

அப்படிச் சறுக்கியபோது பயணி ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

கடும் நெடி வீசியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர் என்றும் ஆயினும், விமானத்தினுள் புகையோ தீயோ இல்லை என்றும் ஃபிரன்டியர் ஏர்லைன்ஸ் நிறுவனம், ‘ஃபாக்ஸ் பிஸ்னஸ்’ ஊடகத்திடம் தெரிவித்தது.

இச்சம்பவத்திற்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்ட அந்நிறுவனம், சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!