நியூயாா்க்: இந்தியாவின் பறவைப் பாதுகாவலர் 45 வயது பூா்ணிமாதேவி பா்மன் அமெரிக்காவின் டைம் வார இதழின் இந்த ஆண்டின் சிறந்த பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றும் பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும் டைம் இதழ் வெளியிட்டு வருகிறது. 2025ஆம் ஆண்டின் பட்டியலில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 13 பெண்கள் தோ்வு செய்யப்படுள்ளனா். இந்தியாவில் இருந்து பூா்ணிமாதேவி பா்மன் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளாா்.
அஸ்ஸாமைச் சோ்ந்த வனவிலங்கு உயிரியலாளரான பூா்ணிமா தேவி பா்மன், ‘ஹா்கிலா’ என்ற நாரை பறவை இனத்தைப் பாதுகாக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறார். அவரின் தலைமையில் 10,000 பெண்கள் அடங்கிய ‘ஹா்கிலா ராணுவம்’ என்ற குழு ஹா்கிலா பறவைகளின் கூடுகளைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்தியாவிலும் கம்போடியா போன்ற பிற நாடுகளிலும் அவரது முயற்சிக்குப் பலரும் ஆதரவளித்து வருகின்றனா். அவரின் பணிகள் பிரான்சில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடமாக உள்ளது.
ஹா்கிலா பறவைகளை அழிவில் இருந்து காத்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக அந்தப் பறவைகளின் உருவம் பதித்த பாரம்பரிய உடைகளை நெய்து ‘ஹா்கிலா’ பராமரிப்புக் குழு விற்பனை செய்து வருகிறது. இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை தங்களின் அன்றாட செலவுக்கு அந்த குழுவினா் பயன்படுத்துகின்றனா்.
கடந்த 2023ல் இயற்கை பாதுகாப்புக்கான அனைத்துலக ஒன்றியத்தின் உயிரினங்கள் வகைப்பாட்டில் அழிவுநிலையில் உள்ள உயிரினங்கள் பட்டியலில் இருந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் உயிரினங்கள் பட்டியலுக்கு ஹா்கிலா நாரை இனம் மாற்றப்பட்டது.
அதன் பிறகு அஸ்ஸாமில் இந்தப் பறவைகளின் எண்ணிக்கை 1,800 ஆக உயா்ந்தது.

