பிரேசிலில் கனமழையால் 39 பேர் உயிரிழப்பு; ஆறுகளாக மாறிய தெருக்கள்

பிரேசிலியா: பிரேசிலின் தென் மாநிலமான ரியோ கிராண்ட் டூ சூல், கனமழையால் அவதிப்படும் நிலையில் அங்கு குறைந்தது 39 பேர் மாண்டுவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், 70க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. ஒருசில இடங்களை மீட்பு அதிகாரிகளும் அணுக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் வரும் நாள்களில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தின் 497 நகர்களில் கிட்டத்தட்ட பாதி நகர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.

குறைந்தது 23,000 பேர் தங்களின் இருப்பிடங்களிலிருந்து வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

பல இடங்களில் தெருக்கள் ஆறுகளாக மாறிவிட்டன; சாலைகளும் பாலங்களும் அழிந்துவிட்டன.

நிலச்சரிவுகள், அணைக் கட்டமைப்பின் ஒரு பகுதி சேதம் என வேறு பல பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரியோ கிராண்ட் டூ சூல் மாநிலம் புவியியல்ரீதியாக அமைந்துள்ள இடம், கடும் மழையும் வறட்சியும் மாறி மாறிவரும் வானிலை முறையைக் கொண்டுள்ளது. இந்த வானிலை முறை, பருவநிலை மாற்றத்தால் மோசமடைந்துவருவதாக உள்ளூர் அறிவியல் நிபுணர்கள் நம்புகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!