1எம்டிபி சர்ச்சையின் தொடர்பில் மலேசியாவின் முன்னைய பிரதமர் நஜிப் ரசாக்கின் மீதான நீதிமன்ற விசாரணையை ஒத்திவைக்க அரசுதரப்பு வழக்கறிஞர்கள் செய்திருந்த விண்ணப்பத்தை மலேசிய உயர்நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. நீதிபதி கொலின் லாரன்ஸ் செகுவேரா இந்த முடிவை இன்று வெளியிட்டார்.
1எம்டிபியின் விசாரணை தேதியைத் தள்ளிவைக்க அரசுதரப்பினர் இத்துடன் மூன்றாவது முறையாகக் கேட்டிருக்கின்றனர். திரு நஜிப்பின் எஸ்ஆர்சி நீதிமன்ற விசாரணைக்காக அவகாசம் வேண்டி அவர்கள் அவ்வாறு கேட்டுள்ளனர். அந்த வழக்கை வேறொரு நீதிமன்றம் விசாரிக்கிறது.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம், 2.28 பில்லியன் ரிங்கிட் பண மோசடி தொடர்பில் திரு நஜிப் மீது 25 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.