இந்தோனீசியா, சீனாவில் நிலநடுக்கம்

இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதியான பாப்புவா நியூ கினியில் நேற்று (ஜனவரி 19) 6.0 ரிக்டர் அளவிலான வலுவான நில நடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் (யுஎஸ்ஜிஎஸ்) குறிப்பிட்டது.

வட்டாரத் தலைநகரான ஜெயபுராவிலிருந்து 158 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

அதேபோல, வடமேற்கு சீனாவின் சின்ஜியாங் வட்டாரத்தில் நேற்று (ஜனவரி 19) பின்னேரத்தில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் (யுஎஸ்ஜிஎஸ்) குறிப்பிட்டது.

நேற்று இரவு 9.27 மணிக்கு காஷ்கர் நகருக்கு 100 கி.மீ. கிழக்கு - வடகிழக்கில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்தப் பகுதியில் பல வீடுகள் மண், செங்கற்களால் கட்டப்பட்டிருப்பதால் பல கட்டடங்கள் சேதமடைந்திருக்கும் என்று கூறிய அந்த நிலயத்தின் ஆரம்பகட்ட கணிப்புப்படி, உயிர்ச்சேதம் இல்லை என்றது.

மக்கள் அதிகம் வசிக்காத மலை, பாலைவனப் பகுதி அது என்று கூறப்பட்டது.

#தமிழ்முரசு #நிலநடுக்கம் #இந்தோனீசியா #சீனா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!