கொரோனா கிருமித் தொற்று: சீனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,000ஐ தாண்டியது; 636 பேர் பலி

சீனாவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,000ஐ தாண்டியுள்ள நிலையில், அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 636ஆக உயர்ந்துள்ளது என இன்று (பிப்ரவரி 7) தெரிவிக்கப்பட்டது.

புதிதாக அறிவிக்கப்பட்ட 73 மரணங்களில் 69 ஹுபெய் மாகாணத்தில் என்றும் அதில் 64, வூஹானில் நிகழ்ந்ததாகவும் செய்தி குறிப்பிட்டது.

புதிதாக கிருமித் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட 3,143 பேரையும் சேர்த்து, சீனாவில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,161ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 4,800க்கும் அதிகமானவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹுபெய் மாகாணத்தில் மட்டும் 2,447 புதிய கிருமித் தொற்று சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் அதனையடுத்து, அந்த மாகாணத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,112 ஆகியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று வரை 1540 பேர் உடல்நலம் தேறி வீடு திரும்பியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

#தமிழ்முரசு #கொரோனா #சீனா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!