மணிலா: பிலிப்பீன்சில் இன்று (மார்ச் 17) புதிதாய் 45 கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் அறிவிக்கப்பட்டன என்றும் அவற்றையும் சேர்த்து அந்நாட்டில் மொத்தம் 187 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்தது. அங்கு இதுவரை இந்தக் கொள்ளைநோய்க்கு 12 பேர் பலியாகி விட்டனர்.
சோல்: தென்கொரியாவில் இன்று 84 புதிதாக கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் பற்றி அறிவிக்கப்பட்டது. அவற்றையும் சேர்த்து அங்கு இதுவரை 8,320 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.தொடர்ந்து மூன்றாக நாளாக அங்கு நாள்தோறும் 100க்கும் குறைவான சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. பிப்ரவரி 29ஆம் தேதி மட்டும் அங்கு 909 சம்பவங்கள் அறிவிக்கப்பட்டன.
புனோம்பென்: கம்போடியாவில் இன்று 12 கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. அந்நாட்டில் மொத்தம் 24 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் களில் 11 பேர் மலேசியாவில் நடைபெற்ற சமய நிகழ்வுக்குச் சென்றிருந்தனர்.
#கொரோனா #கொவிட்-19