தாய்லாந்தில் கெரோனா கிருமித்தொற்றுக்கு இன்று (ஏப்ரல் 8) மேலும் 3 பேர் பலியாகிவிட்டனர்.
புதிதாக 111 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மாண்டவர்களில் 48 வயது ரஷ்யர் ஒருவர்; 69 வயது இந்தியர், 69 வயது அமெரிக்கர் ஆகியோர் மற்றவர்கள் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தாய்லாந்தில் கடந்த ஜனவரியில் கொரோனா முதன்முதலாக தலைகாட்டியது.
அது முதல் மொத்தம் 2,369 பேரை அந்தக் கிருமி தொற்றி இருக்கிறது.
இதுவரை 30 பேர் மாண்டுவிட்டனர்; 888 பேர் குணமடைந்து உள்ளனர்.
தாய்லாந்தில் மிகவும் பிரபலமான பட்டாயா உள்ளிட்ட பல பொழுதுபோக்கு பகுதிகளும் மூடப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரபலமான புக்கெட், கொரோனா கிருமித்தொற்று மையமாகப் பரிணமித்து உள்ளது.