மெக்பர்சன் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் திருவாட்டி டின் பெய் லிங்கை எதிர்த்து தாம் போட்டியிடப் போவதாக மக்கள் சக்திக் கட்சியின் தலைமைச் செயலாளரான 50 வயது திரு கோ மெங் செங் நேற்று (ஜூன் 25) தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் கருத்துரைத்த திருவாட்டி டின், "திரு கோ தரவிருக்கும் போட்டியை நான் வரவேற்கிறேன். அது மெக்பர்சன் தொகுதி மக்களுக்கும் ஜன நாயகத்துக்கும் நல்லது. திரு கோ அரசியலில் அனுபவசாலி. அவரது தேர்தல் களத் திறமையை நான் குறைத்து மதிப்பிட மாட்டேன்," என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

