இந்தோனீசியாவின் சுலாவேசி தீவில் நேற்று திடீர் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக குறைந்தது 16 பேர் மரணமடைந்தனர்.
மேலும் நூற்றுக்கணக்கானோர் வசிக்க வீடின்றி தவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு சுலாவேசி மாநிலம், வடக்கு லூவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால் காணாமல்போன 23 பேரைத் தேடுதல், மீட்பு அதிகாரிகள் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.