இந்தோனீசிய தலைமைச் சட்ட அதிகாரி அலுவகத்தில் பெருந்தீ

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள தலைமைச் சட்ட அதிகாரியின் அலுவலகத்தில் பெருந்தீ ஏற்பட்டதன் தொடர்பில் போலிஸ் விசாரணை மேற்கொள்ளப்படும் என அந்நகரின் போலிஸ் பேச்சாளார் யுஸ்ரி யுனுஸ் கூறினார்.

நேற்று இரவு 7 மணி வாக்கில் தெற்கு ஜகார்த்தாவில் அமைந்துள்ள அந்த ஆறு மாடிக் கட்டடத்தின் பெரும்பகுதி தீக்கிரையாவதை புகைப்படங்கள் சித்திரித்தன. 65 தீயணைப்பு இயந்திரங்களின் உதவியுடன் 200 தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

அந்த தீச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெரும்புள்ளிகளின் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வரும் இவ்வேளையில் தீச்சம்பவம் ஏற்பட்டிருப்பது குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் பரவிய நிலையில், வழக்குகள் தொடர்பான கோப்புகள் பாதுகாப்பாக இருப்பதாக தலைமைச் சட்ட அதிகாரி அலுவலக பேச்சாளர் ஹரி செடியோனோ கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!